சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…

சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக் கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா? ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான்! சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி – வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி ஒரு… மேலும் படிக்க

கா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் மகாத்மா காந்தியின் சுயசரிதையை வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். “சத்ய சோதனம்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க

வடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…

ஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல், வீட்டு பொறுப்புகள், சமூக பொறுப்புகள் என்று இருக்கும் போது, சமஸ்க்ருத வகுப்பிற்கு சென்று நேரம் செலவிட பெரும்பாலும் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இருக்காது.

மேலும் படிக்க

சமஸ்க்ருத இலக்கண சொற்கள்

தமிழ் இலக்கணத்தில் ‘பெயர்ச்சொர்ல்’, ‘வினைச்சொல்’ (noun, verb) போன்ற இலக்கண பெயர்களுக்கு ஈடான சமஸ்க்ருத இலக்கண சொற்களும், அவற்றுக்கான விளக்கங்களின் தொகுப்பு.

மேலும் படிக்க

இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்

“அழகிய வளைந்த வில்லில் அம்பை பொருத்திய நிலையில், எய்வதற்காக தன் கையை மடக்கி குவித்து அம்பை பிடித்து வலது கண்ணின் அருகில் வரை இழுத்து பிடித்தபடி, தோள்களை குவித்து, இடது காலை மடக்கியபடி இருந்த காமனை பார்த்தான்.”

மேலும் படிக்க

வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்

தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் ஐந்து நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறன. வடமொழியிலும் இதைப் போல முக்கியமாக பஞ்ச மகா காவியங்கள் என்று ஐந்து பெருங்காவியங்களை சொல்வர்.

குமாரசம்பவம், ரகுவம்சம் ஆகிய காளிதாசனின் படைப்புகள், பாரவியின் கிராதார்ஜுநீயம், மாகரின் சிசுபாலவதம், ஸ்ரீஹர்ஷரின் நைஷதசரிதம் ஆகியவையே அந்த ஐம்பெருங்காப்பியங்கள். சமஸ்க்ருதம் கற்கும்பொழுது மேலே குறிப்பிட்ட காவியங்களை இதே வரிசையில் பயில சொல்வார்கள்.

மேலும் படிக்க

சீனாவில் காளிதாசன் சிலை!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது. ஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காளிதாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால் வடிவமைக்கப்… மேலும் படிக்க