எம்மைப் பற்றி
சங்கதம் (சமஸ்க்ருதம்) ஒரு மொழி மட்டும் அன்று. அது நமது பாரத நாடெங்கும் உணர்விலும், எல்லா மொழிகளின் பயன்பாட்டிலும் கலந்து இந்த நாட்டின் ஆன்மாவில் ஒரு பகுதியாக விளங்குகிறது. இந்த நாட்டின் பழமையையும், அதன் மாண்பையும், வரலாற்றையும், அழகியலையும், தத்துவ சிந்தனைகளையும் நேரடியாக தெரிந்து கொள்ள சங்கத அறிவு மிகவும் தேவை.
ஒரு மொழியாக கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு (Vedic Period approximately, 3000 B.C) மேலாக சங்கதம் பாரத மண்ணில் மிகச் சிறந்த அறிவாளிகளை ஈர்த்து, அவர்களின் சிந்தனையை ஏந்தி வரும் வாகனமாக அமைந்து வந்திருக்கிறது. ஜெர்மானியரான Max Muller, இங்கிலாந்தின் Sir William Jones, நமது நாட்டில் நேரு, காந்தி, விவேகானந்தர் போன்ற அறிஞர்கள், ஞானிகள் எல்லோரும் அதனைப் போற்றி இருக்கிறார்கள்.
இது ஒரு வழக்கொழிந்த மொழியா என்ற கேள்வி எழுவது வாடிக்கை. நேரடியான வியாபார மொழியாக இல்லாமல் இருந்தாலும், இதன் பயன்பாடு இந்திய தேசமெங்கும் பேசும் மொழிகளில் பொதிந்துள்ளது. சங்கதம் தனக்கென்று ஒரு எழுத்துருவை கொண்டிருக்காமல், வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு எழுத்துருவில் எழுதப்பட்டு வந்திருக்கிறது. இந்த நெகிழ்வுத் தன்மையே, பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து உயிர்ப்புடன் விளங்கும் அதிசயத்தின் ரகசியம்.
சங்கதத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்காக அது குறித்த செய்திகளை தொகுத்து வழங்குவதும், கற்றுக்கொள்ள உதவுவதும், இதனைப் பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறு குறிப்புகள் ஆகியவற்றை தமிழில் எளிமையாக வழங்குவதே இந்த வலைப் பதிவின் நோக்கம். இது தமிழில் ஒரு புதுமையான முயற்சி. இந்த முயற்சியில் பங்குகொள்ள விரும்பினால்
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.


