சம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தி.
Post Category → செய்திகள்
பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015
பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு தாய்லாந்து சில்பகார்ன் பல்கலைக் கழகத்தில் ஜூன் 28 துவங்கி, ஜூலை 2 ம் தேதி வரை நடை பெற உள்ளது. இம்மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளில் ஒன்றில் நடத்தப் படுவதாகும். சம்ஸ்க்ருத மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய பல துறைகளில் ஆய்வுகள், உரைகள் நிகழ்த்தப் படும்.
ஆகாசவாணியில் சம்ஸ்க்ருத வார்த்தைகள்
“நமது மக்களின் வழக்கம் எப்போதுமே நமது நாட்டு திறமைகளையும் பெருமைகளையும் மேற்குலகில் அங்கீகரிக்கப் பட்டபின்னர் தான் கண்டு கொள்வோம். சமஸ்க்ருதத்துக்கும் இதுவேதான் நடந்தது. 1960ம் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜெர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அங்கே ஒரு உள்ளூர் வானொலி நிலையம் சம்ஸ்க்ருதத்தில் நிகழ்ச்சிகளை வழக்கமாக ஒலிபரப்பி வந்ததைக் கண்டார்கள். அவர்கள் திரும்பி வந்து சம்ஸ்க்ருதத்தின் பிறப்பிடமான நமது பாரதத்தில் சம்ஸ்க்ருதத்திலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஏழு ஆண்டுகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டபின்னர் தான் சம்ஸ்க்ருத செய்திகள் துவங்கியது. இப்போது ஆல் இந்தியா ரேடியோ வானொலி நிலையம் தினம் தொண்ணூறு மொழிகளில் 647 செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் தில்லியில் இருந்து மட்டுமே 33 மொழிகளில் 178 செய்திகள் ஒலிபரப்பாகின்றன. இவற்றில் சம்ஸ்க்ருத செய்திகளும் ஒன்று
மேலும் படிக்கநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி
சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியில் மாணவர்கள் உலக அளவில் புகழ் பெற்ற பண்டிதர்களாக ஆனார்கள். மகாமகோபாத்யாயர் போன்ற பெருமைவாய்ந்த பட்டங்களைப் பெற்றனர். கல்வித் துறையில் மேன்மையைக் கூறும் சான்றிதழ்களை பாரத ஜனாதிபதியால் வழங்கப் பெற்றனர். சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி எந்த நிலையிலும் தனது கல்வித்தரத்தைக் குறைத்ததில்லை. 2006 பிப்ரவரியில் சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடியது குறிப்பிடத் தக்கது. சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி 1906ம் ஆண்டு அமைக்கப் பட்டது. சென்னை வக்கீல் ஸ்ரீ V.கிருஷ்ணசாமி ஐயர் என்பாரின் ஆதரவில் தான் இக்கல்லூரி துவங்கியது. மகாத்மா காந்தியே அவரை ஐயர் என்று தான் அழைப்பாராம். ஐயர் சென்னை பார் கவுன்சிலில் தலைவராகவும், பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் பிறகு இறுதியில் கவர்னரின் செயற்குழு உறுப்பினராகவும் தனது மறைவு (20, திசம்பர் 1911) வரை இருந்தவர்.
மேலும் படிக்கவேதாந்த உண்மைகளை அறிய வடமொழி பயிற்சி தேவை
ஆகமங்கள் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி சொல்லித்தருபவை. வேதாந்த உண்மைகளை, வடமொழி பயிற்சி இல்லாத தமிழர்கள், அறிந்து கொள்ள வேண்டும், என்ற சீரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திருமடம், கோவிலூர் மடம். “குரு’ என்பவர் பழுக்காத வாழைப்பழத்தாரில் உள்ள, ஒரு பழுத்த பழத்தோடு ஒப்பிடப்படுகிறார். இந்த பழுத்த பழத்தின் அண்மையே, ஏனைய காய்களை பழுக்க வைத்துவிடும்.கற்றோருக்கு கண்கள் இரண்டோடு, கல்வியும் சேர்த்து மூன்று விழியாகிறது. ஈகை புரிவோருக்கு நகக்கண்கள் சேர்த்து, ஏழு கண்கள் ஆகின்றது. ஞானிகள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு கண்கள் எண்ணிலடங்காதவை.
மேலும் படிக்கசமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’
சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள அனைத்துக்கும் விளக்கம், அவை எங்குள்ளன, எத்தனை பேர் பொழிப்புரை எழுதியுள்ளனர் போன்ற தகவல்களைக் கொண்ட, சென்னை பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத, “என்சைக்ளோபீடியா’ உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை வெளிவராத சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை அகர வரிசையில் தொகுத்து, அரும்பொருள் சொல்லகராதியான, “என்சைக்ளோபீடியா’வை, உருவாக்கியுள்ளனர். 40 தொகுப்புகள் வெளியிட திட்டமிட்டு, 25 தொகுப்புகளை வெளியிட் டுள்ளனர். மேலும், 15 தொகுப்புகளை வெளியிடும் பணியை, பல்கலையின் சமஸ்கிருத துறை மேற்கொண்டுள்ளது.
மேலும் படிக்கராமாயணம் படிக்கலாம் வாங்க…
வால்மீகி ராமாயணத்தை ஒவ்வொரு சுலோகமாகப் படிக்கவேண்டும் என்று ஆசையா? நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா? அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா? சம்ஸ்க்ருதம் தெரியாமல் எப்படி படிப்பது என்று தெரியவில்லையா?
மேலும் படிக்க