சந்தத்தில் மாறாத நடை!

நன்னெறி போதனை, ஆன்மீகம் போன்றவை மட்டும் அல்லாது, இலக்கணம், அறிவியல், கணிதம், வைத்தியம் என்று எதை எடுத்தாலும் வடமொழியில் செய்யுள்கள் (அல்லது ஸ்லோகங்கள்) தான். அதிலும் Technical treatises என்று சொல்லப் படுகிற நூல்களில் கூட அழகழகான சந்தங்களைக் கொண்ட கவிதைகள்.. செய்யுள்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் அரசாணை கூட சந்தம் நிறைந்த சம்ஸ்க்ருத கவிதைகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த மரபில் இன்றும் கூட இறந்த பின் பத்தாம் நாள் இறந்தவரைப் பற்றி ஒரு நான்கு வரி சம்ஸ்க்ருத செய்யுள் (சரம ஸ்லோகம்) எழுதுவித்து படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. ஏன் இவ்வாறு சந்தங்களை எடுத்தாண்டு செய்யுள்கள் இயற்றப் பட்டன?

மேலும் படிக்க