ஆகாசவாணியில் சம்ஸ்க்ருத வார்த்தைகள்

“நமது மக்களின் வழக்கம் எப்போதுமே நமது நாட்டு திறமைகளையும் பெருமைகளையும் மேற்குலகில் அங்கீகரிக்கப் பட்டபின்னர் தான் கண்டு கொள்வோம். சமஸ்க்ருதத்துக்கும் இதுவேதான் நடந்தது. 1960ம் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜெர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அங்கே ஒரு உள்ளூர் வானொலி நிலையம் சம்ஸ்க்ருதத்தில் நிகழ்ச்சிகளை வழக்கமாக ஒலிபரப்பி வந்ததைக் கண்டார்கள். அவர்கள் திரும்பி வந்து சம்ஸ்க்ருதத்தின் பிறப்பிடமான நமது பாரதத்தில் சம்ஸ்க்ருதத்திலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஏழு ஆண்டுகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டபின்னர் தான் சம்ஸ்க்ருத செய்திகள் துவங்கியது. இப்போது ஆல் இந்தியா ரேடியோ வானொலி நிலையம் தினம் தொண்ணூறு மொழிகளில் 647 செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் தில்லியில் இருந்து மட்டுமே 33 மொழிகளில் 178 செய்திகள் ஒலிபரப்பாகின்றன. இவற்றில் சம்ஸ்க்ருத செய்திகளும் ஒன்று

மேலும் படிக்க