வடமொழியும் தென்மொழியும்…

நான் பார்த்தவரை எல்லா தகவற்செறிவுள்ள நூல்களுமே தெலுங்கை ஒரு திராவிட மொழி என்றே கூறுகின்றன – ஆனால் தெலுங்கை தாய்மொழியாக பேசும் எனக்கு, தொண்ணூறு சதவீதம் தெலுங்கு வார்த்தைகள் சம்ஸ்க்ருத வேரில் இருந்து உருவானதாகவே தோன்றுகின்றன – இவ்வாறு இருக்கையில் “திராவிட மொழி” என்று கூறும் மொழியியலின் நிலைப்பாடு குறித்து என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ராஜீவ் மல்ஹோத்ரா – அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் “உடையும் இந்தியா..?” என்கிற நூல் வேறு ஒரு காரணத்தைக் கூறுகிறது. ஒரு நூற்றாண்டுக்குள், பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில், நமக்கு திராவிட மொழிக் குடும்பம் என்ற பெயர் கிடைக்கிறது – சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் இதுவே திரும்ப திரும்பச் சொல்லப் பட்டு இப்போது படித்த (தென்னிந்திய மொழிகளில் எழுதப் படிக்க தெரிந்த) வட இந்திய மக்கள், “திராவிட” மொழிகளில் இத்தனை சம்ஸ்க்ருத வார்த்தைகளா என்று வியக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் மொழியியல் குறித்து கற்பிக்கும் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப் படவேண்டும் என்று எண்ணுகிறேன்.

மேலும் படிக்க