ஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்

ஹிந்தி/உருது என்று நாம் இன்று அழைக்கும் மொழி முதலில் அரபி எழுத்துகளில் எழுதப்பட்ட மொழி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமிய ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியவுடன் மக்களிடையே அரபி எழுத்தை கைவிட்டு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்திய, அரபி எழுத்தில் எழுதப்படும் உருது என்று ஒரு மொழி இரண்டானது. ஹிந்துக்கள் ஹிந்தியுடன் தங்களை அடையாளத்தை பிணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் உருதுவுடன். இதன் காரணமாக வட இந்தியாவின் மொழி பிரக்ஞையில் குழப்பம் உருவாகி விட்டது. தத்தம் தாய்மொழிகளை கைவிட்டு மக்கள் எல்லாவற்றையும் ஹிந்தி/உருது என்று கருத ஆரம்பித்தனர். இது தான், வடஇந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் நடக்காததற்கு முக்கிய காரணம். மக்களுக்கும் சரி, அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சரி, தங்கள் மொழிகளுக்கு மாநிலம் அமைக்க வேண்டும், அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பதே உண்மை. இதில் மத்திய அரசை குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. மக்களாட்சி எனும் பொழுது மக்களின் முன்னுரிமைகள் (priorities) தான் அரசில் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க