சம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்

வால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச் சென்றார். அதற்கு பிறகு பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தை பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜ மகாராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது. பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள்… மேலும் படிக்க

போஜராஜன் சபையில்…

போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் – கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

மேலும் படிக்க