சம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி… மேலும் படிக்க
Posts Tagged → பாணினி
பாணினியின் அஷ்டாத்யாயி – 2
பாணின என்பவரின் மகன் அல்லது “பணின்” என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக “பாணினி” என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. “பாணினி” என்ற பெயரைத் தவிர தாக்ஷி புத்ர “தாக்ஷி என்பவரின் மகன்”, ஸாலாதுரீய “ஸாலாதுர” என்ற மற்ற பெயர்களும் உண்டு. கி.மு 7ஆம் நூற்றாண்டிலிருந்து 4ஆம் நூற்றாண்டு வரை, அறிஞர்கள் இவருடைய காலத்தை ஏதோவொரு நூற்றாண்டைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று நம்பப் படுகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸாலாதூர என்ற கிராமம் பாணினியின் பிறந்த இடமென்று நம்பப் படுகிறது. இது தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற இடமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து.
மேலும் படிக்கபாணினியின் அஷ்டாத்யாயி – 1
இந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென நம்பப் படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா என்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி சம்ஸ்க்ருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. (முதன்முதலாக சம்ஸ்க்ருதம் என்ற சொல் மொழியின் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளதை இராமாயணத்தில்தான் காணலாம்) ஆயினும், பாஷாவின் தனிப்பட்ட வர்ணனையிலக்கணம் தான் அஷ்டாத்யாயி என்று கூறுவது பொருத்தமாகாது. காலத்தால் முற்பட்ட வேதமொழியின் மொழிக்கூறுகள் (சந்த³ஸி). இந்தியாவின் கீழ்பகுதி (ப்ராசாம்), வடபகுதி (உதீ³சாம்) ஆகியவைகளில் காணப்படும் மொழிக்கூறுகள், ஆகியவைகளையும் தனது இலக்கணத்தில் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிடுகிறார். இவைகளைத் தவிர தனது காலத்துக்கு முற்பட்ட காலத்து இலக்கண நூலார்களின் கருத்துக்களையும் மொழிக் கூறுகளின் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்கப்ரத்யாஹாரம் என்றால் என்ன?
சம்ஸ்க்ருத வியாகரணத்தில் ப்ரத்யாஹாரம் என்பவை மிகவும் அடிப்படையும் முக்கியமானதும் கூட. எழுத்துக்களை தொகுத்து அவற்றை குறிப்பாக – ஸமிஜ்ஞை ஆக கொண்டு இலக்கண விதிகள் விதிக்கப் படுகின்றன. பாணினி இறைவன் நடராஜனாக ஆடிய தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு இந்த ப்ரத்யாஹார ஸமிஜ்ஞைகள் உருவானதாக கூறுவது மரபு.
மேலும் படிக்கவியாகரண மண்டபம்
அதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார்! இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது! “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்
மேலும் படிக்கதமிழில் பாணினியின் அஷ்டாத்யாயி
பாணினியின் அஷ்டாத்யாயி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால், தமிழ் இலக்கண நூல்களில் ஆழ்ந்த அறிவுள்ள பல தமிழறிஞர்கள், பாணினியின் இலக்கணத்தோடோ அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடோ நேரிடைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் காணப் படுகிறார்கள். இந்தக் குறையை நிறைவு செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிதான் இந்த தமிழாக்கம்.
மேலும் படிக்க