சம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்

வால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச் சென்றார். அதற்கு பிறகு பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தை பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜ மகாராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது. பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள்… மேலும் படிக்க

காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்!

இளம்பிறை போல் வளைந்துள்ளன மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள் வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது நகக் கீறல்களென. தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை சுவைக்கிறது வண்டு. தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக் கொம்புகளால் வருடுகிறது ஆண்மான். கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக் களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி தாமரைக் குருத்தை நீட்டித் தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம். பெருமரங்களின் திரண்ட கிளைகளைத் தழுவுகின்றன செறிந்த மலர்முலைக் கொத்துக்களும் அசையும் தளிர் இதழ்களும்… மேலும் படிக்க

ஆதிகவியின் முதல் கவிதை

கவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனும் அவன் தான்; சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயும் அவன் தான்; புயலில் அலைவுறும் மரமும் அவன்தான்; சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களும் அவன்தான்; காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே ஆகி விடுவதால் தான், அவனுக்கு அவை புலப்படுகின்றன. பகுத்துப் பார்க்கும் அறிவின் கண்ணால் காணாமல், ஆன்மாவின் வழியாக அறிவதால்தான் அவனால் அவற்றை சொற்களில் வெளிப்படுத்த முடிகிறது…. மேலும் படிக்க

மதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…

இப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள்… மேலும் படிக்க

சம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்

சம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தி.



கடல் போன்ற காளிதாசன் புகழ்!

சம்ஸ்க்ருதத்தில் விரல்களுக்கு அங்குலி என்று பெயர். கை விரல்களுக்கு கநிஷ்டிகா (சிறிய விரல்), அநாமிகா (மோதிர விரல்), மத்யமா (நடுவிரல்), தர்ஜநீ (ஆள்காட்டி விரல்), அங்குஷ்ட: (கட்டை விரல்) என்று பெயர். கட்டை விரல் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் பெண்பால். இதில் மோதிரவிரலுக்கு மட்டும் ஏன் அநாமிகா (பெயரற்றவள்) என்று பெயர்? இதைத்தான் இந்த செய்யுள் வேடிக்கையாக காளிதாசனுடன் இணைத்துக் குறிப்பிடுகிறது.

மேலும் படிக்க

சந்தத்தில் மாறாத நடை!

நன்னெறி போதனை, ஆன்மீகம் போன்றவை மட்டும் அல்லாது, இலக்கணம், அறிவியல், கணிதம், வைத்தியம் என்று எதை எடுத்தாலும் வடமொழியில் செய்யுள்கள் (அல்லது ஸ்லோகங்கள்) தான். அதிலும் Technical treatises என்று சொல்லப் படுகிற நூல்களில் கூட அழகழகான சந்தங்களைக் கொண்ட கவிதைகள்.. செய்யுள்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் அரசாணை கூட சந்தம் நிறைந்த சம்ஸ்க்ருத கவிதைகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த மரபில் இன்றும் கூட இறந்த பின் பத்தாம் நாள் இறந்தவரைப் பற்றி ஒரு நான்கு வரி சம்ஸ்க்ருத செய்யுள் (சரம ஸ்லோகம்) எழுதுவித்து படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. ஏன் இவ்வாறு சந்தங்களை எடுத்தாண்டு செய்யுள்கள் இயற்றப் பட்டன?

மேலும் படிக்க