காவிய அலங்காரம்

இலக்கியம் அல்லது காவியம் என்பது எளிமையாகச் சொல்லப் போனால் சொற்களை, வாக்கியங்களை சரியான விதத்தில் பொருள் பொதிந்ததாக அமைப்பது என்று கருதலாம். இவ்வாறு உருவாகும் காவியங்கள் தமது கருப்பொருளாலும், அமைந்த விதத்தாலும் ஜீவனுள்ளவை ஆகின்றன. இவ்வாறான காவியங்களுக்கு மனிதர்களைப் போலவே உயிர் உண்டு. அங்கங்கள் உண்டு. பண்புகள் உண்டு. காவியத்திற்கு இனிமையே முதன்மையான பண்பு என்று சிலர் கூறுவர். மனிதர்கள் ஆபரணங்களை அணியும்போது அழகு மேலும் கூடித் தெரிவது போல அலங்காரங்கள் காவியத்தின் இனிமையை அழகை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க