சம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்

தமிழ் ஒரு தனிச்செம்மொழி, வடமொழிக்கு ஈடான பாரத நாட்டின் செல்வம் என்பதில் ஐயமில்லை. சம்ஸ்க்ருதம் போன்றே தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்கள் தமிழ் அறிஞர் பெருமக்களால் இயற்றப் பட்டு வந்துள்ளன. அவற்றில் சம்ஸ்க்ருதமும் தமிழும் அறிந்த சிலர் இவ்விரண்டு மொழிகளின் சிறப்பையும் போற்றி இவற்றுக்கு ஒரே இலக்கணம் எழுத முற்பட்டனர். மு.வை. அரவிந்தன் என்பார் எழுதியுள்ள “உரையாசிரியர்கள்” என்ற நூலில் இவர்களில் சிலர் பற்றிய தகவல் உள்ளது. ஒரு தகவலாக அந்த நூலில் ஒரு பகுதியை இங்கே… மேலும் படிக்க

ஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்

ஹிந்தி/உருது என்று நாம் இன்று அழைக்கும் மொழி முதலில் அரபி எழுத்துகளில் எழுதப்பட்ட மொழி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமிய ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியவுடன் மக்களிடையே அரபி எழுத்தை கைவிட்டு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்திய, அரபி எழுத்தில் எழுதப்படும் உருது என்று ஒரு மொழி இரண்டானது. ஹிந்துக்கள் ஹிந்தியுடன் தங்களை அடையாளத்தை பிணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் உருதுவுடன். இதன் காரணமாக வட இந்தியாவின் மொழி பிரக்ஞையில் குழப்பம் உருவாகி விட்டது. தத்தம் தாய்மொழிகளை கைவிட்டு மக்கள் எல்லாவற்றையும் ஹிந்தி/உருது என்று கருத ஆரம்பித்தனர். இது தான், வடஇந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் நடக்காததற்கு முக்கிய காரணம். மக்களுக்கும் சரி, அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சரி, தங்கள் மொழிகளுக்கு மாநிலம் அமைக்க வேண்டும், அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பதே உண்மை. இதில் மத்திய அரசை குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. மக்களாட்சி எனும் பொழுது மக்களின் முன்னுரிமைகள் (priorities) தான் அரசில் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க

குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?

கதை என்பதை गदै என்று உச்சரிப்பதுதான் தமிழ் முறை. ‘அதை’, ‘கதை’, ‘விதை’, ‘மதி’, ‘அன்னையும் பிதாவும்’ இவைகளில் எல்லாம் தமிழர் த என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் द வாகத்தான் உச்சரிப்பார்கள். அவ்வாறு உச்சரிப்பது தமிழ் முறையில் சரியேயாகும். நான் கூறியிருப்பது வடமொழிப் பயிற்சி அடைந்தவர்களுக்கும் தெலுங்கு, கன்னடம் வழங்கும் பிரதேசங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசமாகத் தோன்றலாம். தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப் பட்டவை. பிற பாஷைகளைத் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதப் புகின் பல குறைகள் தோன்றும். அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை நாம் குறை கூறுவதோ இகழ்வதோ கூடாது.

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…

தத்துவ விளக்கங்களைக் தமிழிலும் வடமொழியிலும் கலந்தளித்து களித்த சமயம் வைணவம். திராவிட வேதம் என்று தமிழ் நூல்களை போற்றுகிறது அது. தமிழ் – சம்ஸ்க்ருதம் இரண்டும் இரு கண்களாகப் போற்றி உபய வேதாந்தம் என்றே பெயர்பெற்றது தமிழ்நாட்டு வைணவம். உபய என்றால் இரண்டு என்று அர்த்தம். அத்தகைய சமயத்தின் கண்ணெனப் போற்றப் படுவது ஆண்டாளின் திருப்பாவை என்றால் மிகையில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளே பக்தர்களால் மிகவும் உகந்து கொண்டாடப் படுகிறாள். ஆண்டாள் இயற்றிய திருப்பாவைக்கு ஈடான வடமொழி நூல் என்று சொல்லக் கூடியவை இல்லை என்றே சொல்லி விடலாம். இந்நிலையில் திருப்பாவையை எளிய, படித்து மகிழக் கூடிய அளவில் வடமொழியில் சீருடன் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கம் ராமானுஜ சித்தாந்த வித்யா பீடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க

அம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு

ஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க

ஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா!

சிலப்பதிகாரச் செல்வி! அற்புதங்களின் தாய்! கற்பிற்கரசி! தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம், பெருமை, பேரருளின் அம்மை, கண்ணகி வரலாறு பேசும் நவரத்ன மாலா புதிதாக இயற்றியது.. கண்ணகிக்கு ஈழத்தின் பல பாகங்களிலும் அநேக ஊர்களில் எல்லாம் பழங்காலம் தொட்டு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் வற்றாப்பளை போன்றவை உலகப்புகழ் பெற்றவை. இவ்வாறு கண்ணகி ஆலயங்கள் நிமிர்ந்து நின்ற போதும், இன்றைக்கு ஆகம வழிப்பட்ட ஆராதனைகளும் உற்சங்களும் கண்ணகா பரமேஸ்வரிக்கு முன்னெடுக்கப்படும் போதும், சம்ஸ்கிருத வழி துதிப்பாக்கள் இந்த அன்னைக்கு இன்று வரை இல்லாதே இருக்கின்றன (அண்மையில் வெளியான அஷ்டோத்திரசதம் தவிர..) இந்நிலையில் இந் நவரத்னஸ்துதி அம்பிகை திருவடிகளில் சமர்ப்பிக்கின்றோம்..

மேலும் படிக்க

ஒரீஇ – சில ஐயங்கள்

வடஎழுத்தும், வடசொல்லும் அல்லது எந்த பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு அதீதமாகப் பயன்படுத்துவது தவறாகும். அதற்கு நேர் எதிராக பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்வது தமிழின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பாதகமாகவே அமையும். — செ. அ. வீரபாண்டியன் (டாக்டர். வீ)

மேலும் படிக்க