அம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு

ஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க

பௌத்த கலப்பு சமஸ்கிருதம்

மொழியியல் ரீதியிலும் அக்காலத்து மக்களின் மொழிப்பயன்பாடு மற்றும் சாமான்யர்களிடையே புழங்கிய சமஸ்கிருதம் ஆகியவற்றைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள பௌத்த கலப்பு சமஸ்கிருதம் மிகவும் முக்கியமானதொரு கருவி ஆகும். வெகுஜன பயன்பாட்டிற்கு உரிய முறையில் பௌத்த சமஸ்கிருதம் ஆரம்ப காலத்தில் விளங்கியது. இதேபோல இதிஹாசங்களில் வரும் சமஸ்கிருத பயன்பாட்டையும் “இதிஹாஸ சமஸ்கிருதம்” (Epic Sanskrit) என்று அழைக்கின்றனர். சமஸ்கிருதம் என்பது மிகவும் கடுமையான கட்டுக்கோப்பான மொழி என்ற பொதுவான எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில், மக்களின் பயன்பாட்டிற்காக அமைந்த இது போன்ற மொழிப்பயன்பாடுகளையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். சமஸ்கிருதம் என்பது பண்டிதர்களுக்கு கட்டுப்பட்ட மொழி மட்டுமல்ல, சாமான்யர்களுக்கும் நெகிழ்ந்து செல்லக்கூடியமொழி என்பதையே இது மீண்டும் வலியுறுத்துகிறது.
— திரு.வினோத் ராஜன்.

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா?

சம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள் எழுத மட்டுமே சம்ஸ்க்ருதம் பயன்பட்டது என்று எண்ணுவது தவறு. ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி, அது இலக்கியங்களுக்கான மொழி என்று கூறி விட முடியும். அப்படியானால் ஆங்கிலம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. இப்படிச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்! அப்படியெனில் சம்ஸ்க்ருதம் இப்போது ஏனைய மற்ற இந்திய மொழிகள் போல ஏன் பேசப்படும் மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக இல்லை?

மேலும் படிக்க

முருகன் தந்த வடமொழி இலக்கணம்

முருகனின் மயிலுக்கு சம்ஸ்க்ருதத்தில் கலாபம் என்று பெயர். அந்த பெயராலும் இந்த இலக்கணம் விளங்குகிறது. காஷ்மீரம், திபெத் பகுதிகளில் வாழ்ந்த சம்ஸ்க்ருத அறிஞர்கள் இதில் பெறும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். தென்னாட்டவரின் இறைவன், பாரதத்தின் மணிமுடி வரை வாழ்ந்த அறிஞர்களுக்கு எல்லாம் இலக்கணம் தந்த கல்வித் தெய்வம் என்று எண்ணும் போது மனதில் பெருமை ஏற்படுகிறது.

மேலும் படிக்க

வியாகரண சித்தாந்த கௌமுதி

கௌமுதி என்றால் நிலவொளி என்று அர்த்தம். அஷ்டாத்யாயியை கற்பதற்கு அணுகும் மாணவர்களை, சூரியனின் வெப்பம் போன்ற அதன் கடினத் தன்மை நெருங்க விடாமல் செய்துவிடக் கூடும். அதற்கு மாற்றாக அநேக உதாரணங்களுடன் நிலவொளியின் குளுமையை ஒத்ததாக அமைந்த நூலே வியாகரண சிந்தாந்த கௌமுதி என்று அழைக்கப் படுகிறது.

மேலும் படிக்க

சமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி

நவீன மொழிகளினுள் (ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் போன்றவை) நுழைந்து விடும் முதல் குறைபாடு, அவைகளுக்கு அடிப்படையாக உள்ள கொள்கையில் இருந்தே உருவாகிறது. நவீன கால பேச்சு முறைகளில் உள்ள பல குறைபாடுகளுக்கு இந்த அடிப்படை கொள்கைதான் முக்கிய காரணம். <..> “மரம்” என்று நேரடியாக மரத்தைக் குறிக்கும் சொல் எதுவுமே சமஸ்க்ருதத்தில் இல்லை. . உண்மையில்  எந்த உலகில் காணும் எந்த பொருளுக்குமே சமஸ்க்ருதத்தில் வார்த்தைகள் இல்லை (சில குறைவான எண்ணிக்கையிலான வார்த்தைகளை தவிர). <..>

மேலும் படிக்க

ரகுவம்சம் – சில பாடல்கள்

ரகுவம்சம் சம்ஸ்க்ருத மகாகவி காளிதாசனின் தலைசிறந்த காவியங்களுள் முக்கியமானது. இது கேட்டு ரசிக்கத் தக்க வகையில் உள்ள ஸ்ரவ்ய காவ்ய வகுப்பைச் சேர்ந்தது. (சாகுந்தலம் போன்ற நாடகங்கள் த்ருச்ய காவியம் – பார்த்து ரசிக்கத் தக்கவை). அதோடு சம்ஸ்க்ருதத்தில் ஐம்பெருங்காவியங்களில் பஞ்ச மகா காவியங்கள் ஒன்று ரகுவம்சம் [..]

மேலும் படிக்க