ஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல், வீட்டு பொறுப்புகள், சமூக பொறுப்புகள் என்று இருக்கும் போது, சமஸ்க்ருத வகுப்பிற்கு சென்று நேரம் செலவிட பெரும்பாலும் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இருக்காது.
மேலும் படிக்கPosts Tagged → சமஸ்க்ருதம்
சமஸ்க்ருத இலக்கண சொற்கள்
தமிழ் இலக்கணத்தில் ‘பெயர்ச்சொர்ல்’, ‘வினைச்சொல்’ (noun, verb) போன்ற இலக்கண பெயர்களுக்கு ஈடான சமஸ்க்ருத இலக்கண சொற்களும், அவற்றுக்கான விளக்கங்களின் தொகுப்பு.
மேலும் படிக்கமுகமா… வாயா…
அண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார்… “சேலத்தில் முக்கிய நபர் கைது!” – பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் “அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா?” – கவுண்டமணி மாதிரி கேட்கிறார். முக்கியம் என்று இங்கே சொல்வது “முதன்மையான” – “பிரதானமான” என்ற பொருளில். இந்த முக்கியம் என்கிற வார்த்தையே “முக்யம்” என்கிற சமஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது தான். முக்யம் என்பதும் முகம் என்கிற சொல்லில் இருந்து வந்தது…. மேலும் படிக்க
சீனாவில் காளிதாசன் சிலை!
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது. ஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காளிதாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால் வடிவமைக்கப்… மேலும் படிக்க
தெரியுமா உங்களுக்கு?
இன்றைய சமஸ்க்ருதத்தில் காணப் படும் பல வார்த்தைகள் வேதகால சம்ஸ்க்ருதத்தில் கிடையாது. பாணினி யார்? சமஸ்க்ருத காவியங்களில் என்ன சிறப்பு? ஆங்கிலத்தில் அப்படியே பயன்படும் சமஸ்க்ருத வார்த்தைகள்!
மேலும் படிக்கசமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!
“தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!”
மேலும் படிக்கவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…
ஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க