எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.

மேலும் படிக்க

ஒரீஇ – சில ஐயங்கள்

வடஎழுத்தும், வடசொல்லும் அல்லது எந்த பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு அதீதமாகப் பயன்படுத்துவது தவறாகும். அதற்கு நேர் எதிராக பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்வது தமிழின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பாதகமாகவே அமையும். — செ. அ. வீரபாண்டியன் (டாக்டர். வீ)

மேலும் படிக்க

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் [..]

மேலும் படிக்க

கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி

இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள் [..] இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம் [..] இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.

மேலும் படிக்க

“அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables)

சமஸ்க்ருதத்தில் அவ்யயம் என்பது இடம், காலம் இவற்றால் மாறாதது. இவை ஆயிரக்கணக்கில் உள்ளன. சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். சமஸ்க்ருதத்தை உறுதியுடன் கற்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான நூல்.

மேலும் படிக்க

வடமொழியில் உரையாடுங்கள் – 4

சமஸ்க்ருதத்தில் இறந்த கால வினைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும். இந்தப் பகுதியில் எளிய முறையில் இறந்தகால சொற்களைப் பற்றியும், அதிகம் – குறைவு, உயரம் – குள்ளம் போன்ற ஒப்பீட்டுச் சொற்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

வடமொழியில் உரையாடுங்கள் – 3

சமஸ்க்ருதத்தில் பலவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்புவது எப்படி? காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி? இந்த பகுதியில் இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

மேலும் படிக்க