பாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்

தமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல, சம்ஸ்க்ருத கவிஞர்களையும் தான்! மகாபாரதம் முதல் காளிதாசனின் காவியங்கள் வரை பாண்டியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாண்டியர்கள் சமஸ்க்ருதத்தை வெறுத்ததில்லை. தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்களே சம்ஸ்க்ருதத்தையும் போற்றி வந்துள்ளனர். தமிழ் தேசத்தில் வடமொழி எவ்வாறு இருந்தது என்பது பலர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தம் மனச்சாய்வுக்கு ஏற்ப, சம்ஸ்க்ருதம் ஒரு வட இந்திய மொழி என்பன போன்ற கருத்துக்களை நம்புகிறார்கள்.

மேலும் படிக்க

காதல், காற்று, கவிதை…

கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து வரும் போலும்! சிருங்கார ரசம் ததும்பும் இந்தப் பாடல்கள்…

மேலும் படிக்க

அண்ணா ஹசாரே துதி

அண்ணா ஹசாரே என்ற பெயர் பெற்ற இந்த யோகி ஊழல் அழிப்பு யாகத்தை தொடங்கியவர் நூறாண்டு கடந்து திடமாக வாழட்டும்!

மேலும் படிக்க

போஜராஜன் சபையில்…

போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் – கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

மேலும் படிக்க

இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்

“அழகிய வளைந்த வில்லில் அம்பை பொருத்திய நிலையில், எய்வதற்காக தன் கையை மடக்கி குவித்து அம்பை பிடித்து வலது கண்ணின் அருகில் வரை இழுத்து பிடித்தபடி, தோள்களை குவித்து, இடது காலை மடக்கியபடி இருந்த காமனை பார்த்தான்.”

மேலும் படிக்க

சமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!

“தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!”

மேலும் படிக்க

வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…

ஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க