கற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்

ஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.

மேலும் படிக்க

வால்மீகி இராமாயணத்தின் உரைவளம்

கவிதை என்னும் மரக்கிளைமேலேறி அமர்ந்து ராம ராம என்று மதுரமொழியில் கூவும் குயிலாம் வால்மீகியை வணங்குகிறேன்! சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார்?! ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன்!! कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् | आरुह्य कविता शाखां वन्दे वाल्मीकि कोकिलम् || वाल्मीकेर्मुनिसिंहस्य… மேலும் படிக்க

அத்தியாயங்களுக்கு இத்தனை பெயர்களா!

எந்த வகை நீண்ட காவிய இலக்கியம் ஆனாலும், அதனுள் பல உட்பிரிவுகள் வைத்து பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கம். அதிகாரம், அத்தியாயம், சருக்கம், காண்டம், படலம், அங்கம் என்பன போன்ற பகுப்புகள் அல்லது பிரிவுகள் தமிழ், வடமொழி இலக்கியங்களில் உள்ளன. ‘அங்கம்’ பொதுவாக நாடக நூல்களில் அமைவது. தமிழில் பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகம் ஐந்து அங்கங்களோடு அமைந்துள்ளது; ஒவ்வோர் அங்கத்திலும் காட்சிகள் ‘களம்’ எனும் பெயரில் விரிகின்றன. மேற்கத்திய… மேலும் படிக்க

காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்!

இளம்பிறை போல் வளைந்துள்ளன மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள் வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது நகக் கீறல்களென. தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை சுவைக்கிறது வண்டு. தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக் கொம்புகளால் வருடுகிறது ஆண்மான். கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக் களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி தாமரைக் குருத்தை நீட்டித் தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம். பெருமரங்களின் திரண்ட கிளைகளைத் தழுவுகின்றன செறிந்த மலர்முலைக் கொத்துக்களும் அசையும் தளிர் இதழ்களும்… மேலும் படிக்க

ஆதிகவியின் முதல் கவிதை

கவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனும் அவன் தான்; சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயும் அவன் தான்; புயலில் அலைவுறும் மரமும் அவன்தான்; சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களும் அவன்தான்; காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே ஆகி விடுவதால் தான், அவனுக்கு அவை புலப்படுகின்றன. பகுத்துப் பார்க்கும் அறிவின் கண்ணால் காணாமல், ஆன்மாவின் வழியாக அறிவதால்தான் அவனால் அவற்றை சொற்களில் வெளிப்படுத்த முடிகிறது…. மேலும் படிக்க

மதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…

இப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள்… மேலும் படிக்க

கடல் போன்ற காளிதாசன் புகழ்!

சம்ஸ்க்ருதத்தில் விரல்களுக்கு அங்குலி என்று பெயர். கை விரல்களுக்கு கநிஷ்டிகா (சிறிய விரல்), அநாமிகா (மோதிர விரல்), மத்யமா (நடுவிரல்), தர்ஜநீ (ஆள்காட்டி விரல்), அங்குஷ்ட: (கட்டை விரல்) என்று பெயர். கட்டை விரல் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் பெண்பால். இதில் மோதிரவிரலுக்கு மட்டும் ஏன் அநாமிகா (பெயரற்றவள்) என்று பெயர்? இதைத்தான் இந்த செய்யுள் வேடிக்கையாக காளிதாசனுடன் இணைத்துக் குறிப்பிடுகிறது.

மேலும் படிக்க