- சமஸ்க்ருத மொழிக்கென்று எந்த எழுத்துருவும் கிடையாது. பிராமி, நாகரி, தமிழ் கிரந்தம் என்று பல எழுத்துருக்களாலும் (லிபி) எழுதப்பட்டு வருகிறது
- சமஸ்க்ருத மொழியின் வரலாறு இரண்டு கால கட்டத்தைக் கொண்டு வகுக்கப் படுகிறது. வேதகால சம்ஸ்க்ருதம்(Vedic Sanskrit) , செவ்வியல் சமஸ்க்ருதம் (Classical sanskrit) என்பவை அவை.
- “இஷ்டம்”, “கஷ்டம்” போன்ற வார்த்தைகள் வேத கால சமஸ்க்ருதத்தில் கிடையாது
- சமஸ்க்ருத இலக்கணம் இந்நாளைய ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் வாழ்ந்த பாணினி என்பவரால் தொகுக்கப் பட்டது.
- இவருக்கு முந்தைய நாளில் இருந்த இலக்கண நூல்கள் இவர் எழுதிய அஷ்டாத்யாயி என்கிற இலக்கண நூல் வந்த பின் வழக்கொழிந்து போய் விட்டன.
- பாணினி தந்த இலக்கணப் படி அமைந்துள்ள சமஸ்க்ருத மொழியே செவ்வியல் சமஸ்க்ருதம் என்று அழைக்கப் படுகிறது.
- வேத கால சமஸ்க்ருதத்தில் காணப்படும் ஸ்வரங்களான உதாத்தம், அனுதாத்தம் போன்றவற்றுக்கு சமஸ்க்ருத இலக்கணம் வகுத்த பாணினி எந்த விதிகளையும் குறிப்பிடவில்லை
- சமஸ்க்ருதத்தில் எந்த காவியங்களும் சோகமான முடிவுடனோ, அரைகுறையாகவோ முடிவதில்லை
- வடமொழி கவி காளிதாசன் எழுதிய மிகச் சிறந்த காவியம் “குமார சம்பவம்”. இந்த பெயர் முருகனின் பிறப்பை உணர்த்துகிறது. ஆனால் இந்த காவியத்தில் எந்த இடத்திலும் ஒரு ஸ்லோகத்தில் கூட முருகனின் மீது இயற்றப் படவில்லை.
- Guru, Pundit, Tantra, Shanti, Shakti, Om, Prana, Karma என்று பல சம்ஸ்க்ருத வார்த்தைகள் நடைமுறை ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீதையின் பொருளுரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கீதைக்காகவே
இந்த வலைதளத்தை பயன்படுத்தினேன். நன்றி.
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள உன்னத தகவல்கள்