தெரியுமா உங்களுக்கு?

  • சமஸ்க்ருத மொழிக்கென்று எந்த எழுத்துருவும் கிடையாது. பிராமி, நாகரி, தமிழ் கிரந்தம் என்று பல எழுத்துருக்களாலும் (லிபி) எழுதப்பட்டு வருகிறது
  • சமஸ்க்ருத மொழியின் வரலாறு இரண்டு கால கட்டத்தைக் கொண்டு வகுக்கப் படுகிறது. வேதகால சம்ஸ்க்ருதம்(Vedic Sanskrit) , செவ்வியல் சமஸ்க்ருதம் (Classical sanskrit) என்பவை அவை.
  • “இஷ்டம்”, “கஷ்டம்” போன்ற வார்த்தைகள் வேத கால சமஸ்க்ருதத்தில் கிடையாது
  • சமஸ்க்ருத இலக்கணம் இந்நாளைய ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் வாழ்ந்த பாணினி  என்பவரால் தொகுக்கப் பட்டது.
  • இவருக்கு முந்தைய நாளில் இருந்த இலக்கண நூல்கள் இவர் எழுதிய அஷ்டாத்யாயி என்கிற இலக்கண நூல் வந்த பின் வழக்கொழிந்து போய் விட்டன.
  • பாணினி தந்த இலக்கணப் படி அமைந்துள்ள சமஸ்க்ருத மொழியே செவ்வியல் சமஸ்க்ருதம் என்று அழைக்கப் படுகிறது.
  • வேத கால சமஸ்க்ருதத்தில் காணப்படும் ஸ்வரங்களான உதாத்தம், அனுதாத்தம் போன்றவற்றுக்கு சமஸ்க்ருத இலக்கணம் வகுத்த பாணினி எந்த விதிகளையும் குறிப்பிடவில்லை
  • சமஸ்க்ருதத்தில் எந்த காவியங்களும் சோகமான முடிவுடனோ, அரைகுறையாகவோ முடிவதில்லை
  • வடமொழி கவி காளிதாசன் எழுதிய மிகச் சிறந்த காவியம் “குமார சம்பவம்”. இந்த பெயர் முருகனின் பிறப்பை உணர்த்துகிறது. ஆனால் இந்த காவியத்தில் எந்த இடத்திலும் ஒரு ஸ்லோகத்தில் கூட முருகனின் மீது இயற்றப் படவில்லை.
  • Guru, Pundit, Tantra, Shanti, Shakti, Om, Prana, Karma என்று பல சம்ஸ்க்ருத வார்த்தைகள் நடைமுறை ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகின்றன.

2 Comments தெரியுமா உங்களுக்கு?

  1. ஜீவன்.பி.கே.

    நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீதையின் பொருளுரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கீதைக்காகவே
    இந்த வலைதளத்தை பயன்படுத்தினேன். நன்றி.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)