ஸ்ரீஹர்ஷர் எனும் மகா கவிஞனின் கதை

வடமொழியில் தலைசிறந்த ஐம்பெருங் காவியங்களில் ஒன்று நைஷதம். மகாபாரதத்தில் வரும் நிஷத நாட்டு மன்னன் நளன் மற்றும் தமயந்தி கதையை ஒரு மகா காவியமாக ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் இயற்றி இருக்கிறார். “நைஷதம் வித்வத் ஔஷதம்” என்றொரு பழமொழி உண்டு. இருபத்தி இரண்டு அத்தியாயங்களுடன் கூடிய, பல முடிச்சுகள் நிறைந்த கடினமான காவியம் இது. இது தவிரவும் ஸ்ரீ ஹர்ஷர் அத்வைத தத்துவ சம்பந்தமாகவும் நூல்கள் எழுதி உள்ளார். இந்த மகா கவிஞனை ஜயந்த சந்திரன் என்ற மாமன்னன் ஆதரவளித்து தன் அவைப் புலவராக கொண்டான்.

மேலும் படிக்க