ஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)

முருகப்பெருமானைப் பற்றிய புராண, வரலாற்று நிகழ்வுகள் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் மிகப்பிரபலமானவை.

எனினும், இக்கதைகளுள் முக்கியமானதாக போற்றப்படும் ‘மாம்பழக்கதை’ என்று இரசிக்கப்படும் கதை முருகவரலாறு பேசும் முக்கிய சம்ஸ்கிருதமொழி நூல்களான குமாரசம்பவம், ஸ்காந்தபுராணம் ஆகியவற்றில் காணப்படவில்லை. (இதனால் தமிழில் கச்சியப்பசிவாச்சார்யார் செய்த கந்தபுராணத்திலும் இல்லை). எனினும், பழநித்தலபுராணமாக விளங்குவது இக்கதையே.. தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற திருத்தலமான முருகனின் ஆறுபடைவீடுகளில் மூன்றாவது படைவீடான இந்தப்பழநித்தலத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியமைக்கான முக்கியகதையாக இக்கதையே சொல்லப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழ்த்திரைப்படங்களிலும் இக்கதை சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கந்தன்கருணை திரைப்படத்தில் இக்கதையும், அதோடு இணைந்ததான ஓளவையார் புகழ் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘பழம் நீ அப்பா..’ என்ற பாடலும் முருகபக்தர்களின் உள்ளதை வெகுவாக கவர்ந்தவையாகும்.

மேலும் படிக்க

கதைகள் தேவை

மகாபாரதத்தில் ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி  தவம் செய்வதாக (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக் காத்திருந்ததாக ஒரு கதை உண்டு. ஹிதோபதேச கதைகளில் கண் தெரியாத பறவை ஒன்றுக்கு வாய் ஓயாமல் உபதேசம் செய்யும் குணம்; அதனிடம் தர்மத்தை கற்றுக் கொள்ள ஆசைப் படுவதாக சொல்லிக் கொண்டு பூனை ஒன்று நெருங்கும்…[..] அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டிய நற்சிந்தனையையும் எடுத்துச் சொல்லும் பாரத கலாசாரம் சார்ந்த கதைகள் இன்றைய தேவை.

மேலும் படிக்க