கற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்

ஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.

மேலும் படிக்க

வால்மீகி இராமாயணத்தின் உரைவளம்

கவிதை என்னும் மரக்கிளைமேலேறி அமர்ந்து ராம ராம என்று மதுரமொழியில் கூவும் குயிலாம் வால்மீகியை வணங்குகிறேன்! சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார்?! ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன்!! कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् | आरुह्य कविता शाखां वन्दे वाल्मीकि कोकिलम् || वाल्मीकेर्मुनिसिंहस्य… மேலும் படிக்க

அத்தியாயங்களுக்கு இத்தனை பெயர்களா!

எந்த வகை நீண்ட காவிய இலக்கியம் ஆனாலும், அதனுள் பல உட்பிரிவுகள் வைத்து பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கம். அதிகாரம், அத்தியாயம், சருக்கம், காண்டம், படலம், அங்கம் என்பன போன்ற பகுப்புகள் அல்லது பிரிவுகள் தமிழ், வடமொழி இலக்கியங்களில் உள்ளன. ‘அங்கம்’ பொதுவாக நாடக நூல்களில் அமைவது. தமிழில் பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகம் ஐந்து அங்கங்களோடு அமைந்துள்ளது; ஒவ்வோர் அங்கத்திலும் காட்சிகள் ‘களம்’ எனும் பெயரில் விரிகின்றன. மேற்கத்திய… மேலும் படிக்க

சம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்

வால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச் சென்றார். அதற்கு பிறகு பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தை பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜ மகாராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது. பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள்… மேலும் படிக்க

காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்!

இளம்பிறை போல் வளைந்துள்ளன மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள் வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது நகக் கீறல்களென. தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை சுவைக்கிறது வண்டு. தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக் கொம்புகளால் வருடுகிறது ஆண்மான். கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக் களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி தாமரைக் குருத்தை நீட்டித் தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம். பெருமரங்களின் திரண்ட கிளைகளைத் தழுவுகின்றன செறிந்த மலர்முலைக் கொத்துக்களும் அசையும் தளிர் இதழ்களும்… மேலும் படிக்க

மதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…

இப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள்… மேலும் படிக்க

காவியத்தை ரசிப்பது எப்படி?

ஒரு கவிதையை (ஸ்லோகத்தை) புரிந்து கொள்ள சொற்களை கொண்டு, கூட்டி அமைத்துக் கொள்வது வழக்கம். இதற்கு அந்வயம் என்று பெயர். இவ்வாறு அந்வயம் செய்வதில் இரண்டு முறை உண்டு. தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரண்டு முறைகள் உண்டு. தண்டாந்வயம் என்பது ஒரு கோலை நீட்டியது போல சொற்களை அதன் வரிசையிலேயே படித்து அர்த்தம் சொல்வது. கண்டாந்வயம் என்பது சொற்களை வரிசை மாற்றி வெவ்வேறு இடத்தில் பொருத்தி பொருள் சொல்லும் முறை.

மேலும் படிக்க