Posts Tagged ‘ கவிதை ’

காதல், காற்று, கவிதை…

hill-rain

கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து...

Read more »

அண்ணா ஹசாரே துதி

anna_t

அண்ணா ஹசாரே என்ற பெயர் பெற்ற இந்த யோகி ஊழல் அழிப்பு யாகத்தை தொடங்கியவர் நூறாண்டு கடந்து திடமாக வாழட்டும்!

Read more »

போஜராஜன் சபையில்…

Court

போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் - கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

Read more »

இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்

kama

“அழகிய வளைந்த வில்லில் அம்பை பொருத்திய நிலையில், எய்வதற்காக தன் கையை மடக்கி குவித்து அம்பை பிடித்து வலது கண்ணின் அருகில் வரை இழுத்து பிடித்தபடி, தோள்களை குவித்து, இடது காலை மடக்கியபடி இருந்த காமனை பார்த்தான்.”

Read more »

சமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!

SanskritPoet4

"தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!"

Read more »

வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…

வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…

ஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

Read more »

கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள்

கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள்

சங்கத கவிஞர்கள் போட்டிக்காக தமக்குள் ஒருவர் கவிதையின் ஒரு பகுதியை மட்டும் சொல்ல, மற்ற கவிஞர்கள் அந்த ஒரு பகுதியையும் சேர்த்துக் கொண்டு முழு கவிதையையும் இயற்றுவார்கள். பெரும்பாலும் போட்டிக்கு கொடுக்கப்படும் பகுதி கொஞ்சம் எடக்கு முடக்காக இருக்கும். இதற்கு வடமொழியில் சமஸ்யா பூர்த்தி (समस्या पूर्ति) என்று சொல்வார்கள். கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள் (गौरी पचति गोमांसम्) என்கிற சொற்றொடரை எடுத்துக் கொண்டு இங்கே வடமொழியில் சமஸ்யா பூர்த்தி...

Read more »