பதினைந்தாவது உலக சமஸ்க்ருத மாநாடு வரும் 2012 வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து பத்தாம் தேதி வரை நடை பெற உள்ளது. இது போன்ற உலக சமஸ்க்ருத மாநாடுகள் 1972 வருடம் துவங்கி பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு (2009) பதினான்காவது மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறுகிற நான்காவது சமஸ்க்ருத மாநாடு இது.

