தமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்

திருமுறைகள் பலவற்றிலும் வேத மந்திரங்களால் ஈசன் வழிபடப் பட்டதை “வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக” என்றும் “மறையாயின சொல்லி ஒண்மலர் சாந்தவை கொண்டு முறையான் மிகுமுனிவர் தொழு முதுகுன்றடைவோமே” என்றும் வேத உபாசனை பாடப் பெற்றுள்ளது.
திருவாசகத்தில் “வேதங்கள் தெரிழுதேத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே” என்று தில்லையில் வேதங்களே சிவனை தொழுதவாறு உள்ளன என்று கூறப் படுகிறது. சம்பந்தரின் மற்றோர் தேவாரத்தில் “வேதங்கள் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று முடிந்த முடிவாகக் கூறுகிறார். சைவம் வேறு வேதம் வேறு அல்ல என்பதை “சைவநெறி வைதிகம் நிற்க” என்று கூறுகிறார் சேக்கிழார்.

மேலும் படிக்க

எண்கள், குறிப்புகள், சதுரங்கள்

பழங்காலத்தில் எண்களை பெயர்களில்/கதைகளில் வரும் சொற்களின் எழுத்துக்களில் குறித்து அதை ஒரு ஸ்லோகமாகவும் இயற்றி விடுவர். இதனால் நீண்ட நாட்களுக்கு எண்களை நினைவு வைத்துக் கொள்ளவும் முடியும்; கட்டங்களுக்குள் எப்படிக் கூட்டினாலும் ஒரே கூட்டுத் தொகை – இதற்கு கூட ஒரு ஸ்லோகம் இருக்கிறது….

மேலும் படிக்க

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் [..]

மேலும் படிக்க

சமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்

மண்ணின் வளம், விதைகளை தேர்வு செய்தல், பக்குவப் படுத்துதல், பயிரிடும் காலம், அறுவடை செய்தல், விவசாய சுழற்சி முறை, பல்வேறு பண்பாடு சார்ந்த முறைமைகள், உரமிடுதல், நீர்தேக்கும் முறைகள், அசாம சக்கரம் அல்லது அரஹத்த கதி யந்திரம் எனப்படும் ஏற்றம் அமைக்கும் முறை ஆகியவை பற்றி வேத இலக்கியங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் குறிப்புகள், அன்றைய நாளில் விவசாயிகள் இவற்றைக் குறித்து அறிந்து வைத்திருந்ததையே காட்டுகிறது.

மேலும் படிக்க

கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…

நமது வரலாற்றில்  எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த காலம் இன்றுவரை சரியாக உறுதி செய்யப் பட்டதே இல்லை. அதிலும் பாரத தேசமெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வகையான கலாசாரம் நிலவி வருவதால் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்புகள் தேசமெங்கும் பரவலாக கிடைத்து வருகின்றன. அதனால் இடத்தையும், காலத்தையும் அறுதியிட்டுக் கூறுவது கடினமே. ஆங்கிலேயர்… மேலும் படிக்க

சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…

சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக் கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா? ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான்! சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி – வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி ஒரு… மேலும் படிக்க

சமஸ்க்ருத இலக்கண சொற்கள்

தமிழ் இலக்கணத்தில் ‘பெயர்ச்சொர்ல்’, ‘வினைச்சொல்’ (noun, verb) போன்ற இலக்கண பெயர்களுக்கு ஈடான சமஸ்க்ருத இலக்கண சொற்களும், அவற்றுக்கான விளக்கங்களின் தொகுப்பு.

மேலும் படிக்க