<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sangatham &#187; குறிப்புகள்</title>
	<atom:link href="http://www.sangatham.com/category/news/notes/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.sangatham.com</link>
	<description>வடமொழிக்கு ஒரு தமிழ்த் தளம்! { Tamil Website for Sanskrit }</description>
	<lastBuildDate>Mon, 06 Feb 2012 04:46:18 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3</generator>
		<item>
		<title>காதல்,  காற்று,  கவிதை&#8230;</title>
		<link>http://www.sangatham.com/news/notes/southwest-wind-shlokas.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/southwest-wind-shlokas.html#comments</comments>
		<pubDate>Thu, 17 Nov 2011 00:34:14 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[கவிஞர்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[சிருங்கார ரசம்]]></category>
		<category><![CDATA[சுபாஷிதம்]]></category>
		<category><![CDATA[தேசம்]]></category>
		<category><![CDATA[பருவக் காற்று]]></category>
		<category><![CDATA[பிரதேசம்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<category><![CDATA[மேகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=3303</guid>
		<description><![CDATA[கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர்.  பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து வரும் போலும்! சிருங்கார ரசம் ததும்பும் இந்தப் பாடல்கள்...]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/southwest-wind-shlokas.html/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
<enclosure url="http://www.sangatham.com/wp-content/uploads/southwest-wind-shlokas.mp3" length="1693312" type="audio/mpeg" />
		</item>
		<item>
		<title>சம்ஸ்கிருதம் &#8211; சில கேள்விகள்</title>
		<link>http://www.sangatham.com/news/notes/sanskrit-q-and-a.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/sanskrit-q-and-a.html#comments</comments>
		<pubDate>Tue, 02 Aug 2011 03:40:36 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[sanskrit]]></category>
		<category><![CDATA[சமஸ்க்ருதம்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[மொழியியல்]]></category>
		<category><![CDATA[வடமொழி]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=2668</guid>
		<description><![CDATA[அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் [..]]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/sanskrit-q-and-a.html/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு  குறிப்பு&#8230;</title>
		<link>http://www.sangatham.com/news/notes/molakalmuru-historical-inscription.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/molakalmuru-historical-inscription.html#comments</comments>
		<pubDate>Wed, 27 Oct 2010 23:00:42 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[Highlights]]></category>
		<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[sanskrit]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[காளிதாசன்]]></category>
		<category><![CDATA[சிலை]]></category>
		<category><![CDATA[வடமொழி]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=1333</guid>
		<description><![CDATA[நமது வரலாற்றில்  எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த காலம் இன்றுவரை சரியாக உறுதி செய்யப் பட்டதே இல்லை. அதிலும் பாரத தேசமெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வகையான கலாசாரம் நிலவி வருவதால் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்புகள் தேசமெங்கும் பரவலாக கிடைத்து வருகின்றன. அதனால் இடத்தையும், காலத்தையும் அறுதியிட்டுக் கூறுவது கடினமே. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஏற்படுத்தப் பட்ட தொல்பொருள் துறை, பலகாலமாக கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவற்றின் மொழியை அறிந்து தொகுத்து வருகிறது.  Epigraphia Indica, Epigraphica Carnatica போன்ற தொகுப்பு நூல்களாக பல வால்யூம்களில் இவை பதிப்பிக்கப் பட்டுள்ளன.  கர்நாடக பிரதேசத்தில் கிடைத்த கல்வெட்டுகள் தொல்பொருள் குறித்த Epigraphica Carnatica தொகுப்பு மட்டும் பதினைந்து வால்யூம்கள்.  Epigraphia Indica தொகுப்பு நாற்பத்தி மூன்று வால்யூம்கள்! கி.பி. 1886 ஆண்டு சமயத்தில்  பெங்களூரில் உள்ள ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணிபுரிய வந்த பெஞ்சமின் லூயிஸ் ரைஸ் (B.L. Rice) என்கிற ஆங்கிலேயர் கர்நாடக பகுதியில் சுற்றி வரும் போது பல கல்வெட்டுகளை கண்டு ஆச்சரியமுற்று அவற்றை தொகுக்க துவங்கினார்.  இதன் தொடர்ச்சியாக அவரை தொல்பொருள் துறை தலைவராக ஆங்கிலேய அரசு நியமித்தது. இதற்குள் அவர் சுமார் ஒன்பதாயிரம் கல்வெட்டுகளை கண்டு பிடித்திருந்தார். பதவி ஏற்றதும் அவர் சுமார் பனிரெண்டு வால்யூம் கொண்ட தொகுப்பாக Epigraphica Carnatica என்ற பெயரில் தம் கண்டு பிடிப்புகளை வெளியிட்டார். இந்த  தொகுப்புகளில் பல ஆச்சரியங்கள் உண்டு. உதாரணமாக காளிதாசன் குறித்த ஒரு கல்வெட்டு குறிப்பு மர்மத்தை அடக்கி உள்ளதாக, இன்றும் சம்ஸ்க்ருத வல்லுனர்களை வியப்பில் ஆழ்த்துகிற ஒன்றாக இருக்கிறது.  கர்நாடகாவில் சித்ர துர்கா மாவட்டத்தில் மொலகல்முரு ஒரு சிறிய ஊரில் இந்த கல்வெட்டு கண்டறியப் பட்டுள்ளது.  இவ்வூர் இன்றைக்கு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/molakalmuru-historical-inscription.html/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்&#8230;</title>
		<link>http://www.sangatham.com/news/notes/few-more-reasons.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/few-more-reasons.html#comments</comments>
		<pubDate>Wed, 06 Oct 2010 03:20:39 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[sanskrit]]></category>
		<category><![CDATA[संस्कृतं]]></category>
		<category><![CDATA[சமஸ்க்ருதம்]]></category>
		<category><![CDATA[சம்ஸ்க்ருத கல்வி]]></category>
		<category><![CDATA[சம்ஸ்க்ருத வளர்ச்சி]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[வடமொழி]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=1279</guid>
		<description><![CDATA[சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக் கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா? ஆங்கில முறைக் கல்வி வந்ததிலிருந்து தான்! சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி &#8211; வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி ஒரு திருடர்.  அதனால் சமஸ்க்ருதம் ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது என்ற கூற்று தவறு. பழைய காலத்தில் அப்படி இருந்தது இல்லை. ஆங்கில முறைக் கல்வி வருவதற்கு முன் ஒவ்வொரு கிராமத்திலும், சிற்றூரிலும் பள்ளிக் கூடங்கள் இருந்தன. இன்று பல கிராமங்களில் இல்லை! ஆங்கிலேயரின் ஆட்சியில் மெக்காலே எந்த அளவு நமது நாட்டுக் கல்வியை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட்டார் என்பது நன்கு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. அதன் விளைவாக நமது நாட்டு பாரம்பரியக் கல்வி முறையை கற்க ஆர்வம் குறைவு பட்டது. சமஸ்க்ருத பாரதியின் ஷிபிரம் ஒன்றில் பேசும் போது திரு. ராஜன் அவர்கள் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். அவருடைய நண்பரின் பாட்டனார் காலத்தில் புதிய வீடு ஒன்றுக்கு நிலைப்படி அமைப்பதற்கு தச்சருடன் பாட்டனார் உரையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை இவ்வாறு அமையவேண்டும் என்று மனையடி சாத்திரத்திலிருந்து இவர் ஒரு ஸ்லோகத்தை சொல்ல, பதிலுக்கு அந்த தச்சர் வேறு ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி தன் ஐடியாவை சொன்னாராம். இவ்வாறு இருந்த நிலை இன்று முற்றிலும் மாறிவிட்டது.  இன்று சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம், காரணம் அது வெறும் பாரம்பரிய மொழி என்பதோடு அல்லாமல் மேலும் சில காரணங்களும் அதனுடன் இணைந்திருக்கின்றன. கலாசாரத்துக்கு &#8220;சம்ஸ்க்ருதி&#8221; என்று பெயர். சம்ஸ்க்ருதம் &#8211; சம்ஸ்க்ருதி என்ற சொல் ஒற்றுமை போல, நமது பண்பாட்டை அறிந்து கொள்ள சம்ஸ்க்ருத அறிவு அவசியம். நமது [...]]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/few-more-reasons.html/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?</title>
		<link>http://www.sangatham.com/news/notes/sanskrit_whose_language.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/sanskrit_whose_language.html#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:32:43 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[Highlights]]></category>
		<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[Narayana Guru]]></category>
		<category><![CDATA[சமஸ்க்ருதம்]]></category>
		<category><![CDATA[மொழியியல்]]></category>
		<category><![CDATA[வடமொழி]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=1109</guid>
		<description><![CDATA[ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது. ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான் ஃபாஸிஸம் என்கிறோம். இவ்வாறு வெறுப்பை உருவாக்கும்போது நாம் எதிரீடுகளை உருவாக்குகிறோம். நம்முடையது முழுக்க முழுக்க சரி என்றும் எதிர் தரப்பு முழுக்க முழுக்க தவறு என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். எதிர் தரப்பை குறுக்கி சுருக்கி எளிமையான ஒரு கருத்தாக ஆக்கிக் கொண்டு அதற்கேற்ப நம்மையும் ஓர் எளிய தரப்பாக ஆக்கிக் கொள்கிறோம். இதை தவிர்ப்பதற்கு இன்றியமையாத விவாதங்கள் எதுவுமே நிகழாமல் ஆகின்றன. எதிர் தரப்புடன் விவாதத்துக்கே இடமில்லாத நிலையை ஒரு கட்டத்தில் நாம் அடைகிறோம். தமிழில் மொழி சார்ந்த விவாதங்களில் இந்த நிலை உருவானது ஒரு துரதிருஷ்ட வசமான வரலாற்றுத் திருப்பம். நேற்று நான் பெர்க்கிலி பல்கலையில் பேரா ஜார்ஜ் எல் ட்டை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழை ஆய்வுசெய்வதற்கு சம்ஸ்கிருதம் இன்றி இயலாது என்ற தன் தரப்பை மிக வலுவாக அவர் சொன்னார். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான். தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிர்கஞளுக்கு இருக்கும் சம்ஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்கியிருக்கிறதோ அதேபோல இன்றைய சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழிகளைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் பெரிய தேக்க நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது என்றார். அந்த நிலை எப்படி மாறியது? பிறரைப்போல நான் அதற்கு உடனே ஒரு சதிக்கோட்பாடைச் சொல்ல மாட்டேன். அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/sanskrit_whose_language.html/feed</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>சமஸ்க்ருத இலக்கண சொற்கள்</title>
		<link>http://www.sangatham.com/news/notes/sanskrit-grammar-terms.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/sanskrit-grammar-terms.html#comments</comments>
		<pubDate>Fri, 20 Aug 2010 03:26:02 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[grammar]]></category>
		<category><![CDATA[sanskrit]]></category>
		<category><![CDATA[व्याकरणं]]></category>
		<category><![CDATA[சமஸ்க்ருதம்]]></category>
		<category><![CDATA[வடமொழி]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=607</guid>
		<description><![CDATA[தமிழ் இலக்கணத்தில் 'பெயர்ச்சொர்ல்', 'வினைச்சொல்' (noun, verb) போன்ற இலக்கண பெயர்களுக்கு ஈடான சமஸ்க்ருத இலக்கண சொற்களும், அவற்றுக்கான விளக்கங்களின் தொகுப்பு. ]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/sanskrit-grammar-terms.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முகமா&#8230; வாயா&#8230;</title>
		<link>http://www.sangatham.com/news/notes/face.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/face.html#comments</comments>
		<pubDate>Tue, 27 Jul 2010 02:35:22 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[சமஸ்க்ருதம்]]></category>
		<category><![CDATA[வடமொழி]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=748</guid>
		<description><![CDATA[அண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார்&#8230; &#8220;சேலத்தில் முக்கிய நபர் கைது!&#8221; &#8211; பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் &#8220;அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா?&#8221; &#8211; கவுண்டமணி மாதிரி கேட்கிறார். முக்கியம் என்று இங்கே சொல்வது &#8220;முதன்மையான&#8221; &#8211; &#8220;பிரதானமான&#8221; என்ற பொருளில். இந்த முக்கியம் என்கிற வார்த்தையே &#8220;முக்யம்&#8221; என்கிற சமஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது தான். முக்யம் என்பதும் முகம் என்கிற சொல்லில் இருந்து வந்தது. முகம் என்பது வாசல் &#8211; முன்னால் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். துறைமுகம் என்று சொல்கிறோம் அல்லவா&#8230; சமஸ்க்ருதத்தில் முகம் என்பது முகத்தையும் குறிக்கும் &#8211; வாயையும் குறிக்கும். சமண அரசன் அமரசிம்மன் இயற்றிய அமர கோசம் என்கிற வடமொழி அகராதியில் முகம் என்ற சொல்லுக்கு ஒத்த பொருளில் (synonym) உள்ள சொற்களாக &#8220;வக்த்ராஸ்யம், வத3னம், துண்டம், ஆநநம், லபனம், முகம்&#8221; என்று கொடுக்கப் பட்டுள்ளது. &#8220;வத3&#8221; என்றால் பேசு என்று அர்த்தம். வதனம் என்பது பேச உபயோகப் படும் கருவியான வாயைத் தான் குறிக்கும். அதே போல &#8220;லப்&#8221; என்றாலும் பேசுவது என்று பொருள். லபனம் என்பதும் வாயைத்தான் குறிக்கும். ஆலாபனம், சல்லாபம் போன்ற வார்த்தைகள் லப் என்ற வேர்சொல்லில் இருந்து வந்ததுதான். ஆக வாயின் பெயர்களே முகத்துக்கும் பயன்படுகின்றன. வடமொழியில் வாய் முகம் இரண்டுக்கும் ஒரே மாதிரியான வார்த்தைகள் தான் உள்ளது. சமஸ்க்ருதத்தில் &#8220;வக்தா&#8221; என்றால் பேசுபவன் &#8211; வக்தவ்யம் என்பது பேசப்படும் வார்த்தைகளை குறிக்கும். இதே போல பலதும் உண்டும். ஸ்ரோதா &#8211; கேட்பவன், ஸ்ரோதவ்யம் &#8211; கேட்கப் படும் பொருள், கர்த்தா &#8211; செயலை செய்பவன், கர்தவ்யம் &#8211; செய்யப்படும் செயல் என்று வரும். அந்த வகையில் முகம் என்பது முன்னால் உள்ள, முதன்மையான, உறுப்பான வாயைக் குறிக்கிறது. முக்யம் என்றால் முகத்தின் தன்மை என்று பொருள் படும். அதாவது [...]]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/face.html/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>தெரியுமா உங்களுக்கு?</title>
		<link>http://www.sangatham.com/news/notes/trivia.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/trivia.html#comments</comments>
		<pubDate>Thu, 08 Jul 2010 14:18:17 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[tips]]></category>
		<category><![CDATA[சமஸ்க்ருதம்]]></category>
		<category><![CDATA[வடமொழி]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=699</guid>
		<description><![CDATA[இன்றைய சமஸ்க்ருதத்தில் காணப் படும் பல வார்த்தைகள் வேதகால சம்ஸ்க்ருதத்தில் கிடையாது. பாணினி யார்? சமஸ்க்ருத காவியங்களில் என்ன சிறப்பு? ஆங்கிலத்தில் அப்படியே பயன்படும் சமஸ்க்ருத வார்த்தைகள்!]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/trivia.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வழிபாட்டுத் துதிகளின் வகைகள்</title>
		<link>http://www.sangatham.com/news/notes/sloka_varieties.html</link>
		<comments>http://www.sangatham.com/news/notes/sloka_varieties.html#comments</comments>
		<pubDate>Sat, 27 Feb 2010 23:59:52 +0000</pubDate>
		<dc:creator>संस्कृतप्रिय:</dc:creator>
				<category><![CDATA[Highlights]]></category>
		<category><![CDATA[குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[Slokam]]></category>
		<category><![CDATA[संस्कृतं]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[சமஸ்க்ருதம்]]></category>
		<category><![CDATA[வடமொழி]]></category>
		<category><![CDATA[ஸ்லோகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.sangatham.com/?p=311</guid>
		<description><![CDATA[சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே: ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns  (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை  செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும். ஸ்லோகம்:  செய்யுள் வடிவில் அமையும் துதி; பல்வேறு [அனுஷ்டுப் சந்தம் போன்ற] சந்த வடிவில் இருக்கும்.  [Generally has 8 syllables in each foot; has 'anushtup' metre] த்யானம், மந்திரம், ந்யாசம், கவசம், ஹ்ருதயம்: இவை இறை வழிபாட்டு முறைகளில் (பூஜா விதிகள்) உள்ள அங்கங்கள். கவசம்: நினைப்பவரைக் காப்பது மந்திரம் (த்ராயதே இதி மந்த்ர:); கவசம்  என்பதை &#8216;நாராயண இதி கவசம்&#8217; என்று உரைநடையாகவோ அல்லது தனியான செய்யுள் வடிவிலோ (கந்த ஷஷ்டி கவசம்) காணலாம். தசகம், சதகம்: பத்து/நூறு துதிகள் கொண்ட தொகுப்பு, செய்யுள் வடிவம் உடையவை பஞ்ச ரத்னம்: ஐந்து துதிகள் கொண்ட தொகுப்பு, செய்யுள் வடிவம் உடையவை. ரத்நமாலிகா, நவரத்னமாலிகா: இவை துதிகளைப் பற்றிய வர்ணனைச் சொற்கள். மாலிகா என்பது மாலையைக் குறிக்கும். அழகிய பாமாலையை இங்குக்குறிக்கும். இரத்தினம் போல மிளிரும் ஒன்பது கண்ணிகள் இருப்பது நவரத்ன மாலிகா. பஞ்சசதீ, த்ரிசதீ: ஐந்நூறு துதிகள் கொண்ட தொகுப்பு பஞ்சசதீ, முன்னூறு துதிகள் கொண்டது த்ரிசதீ செய்யுள் வடிவம் உடையவை. கத்யம்: உரைநடை (prose composition); எதுகை மோனை சந்தங்கள் போன்றவற்றை திட்டவட்டமாக கொள்ளாமல் உரைநடையாக இருப்பவை. பத்யம்: இலக்கண அமைப்பு படி செய்யுள்கள் (verse comp0sition) புஜங்கம், லஹரி: முறையே, பாம்பு நெளிவது, அலை அடிப்பது போன்ற நடையில் அமைக்கப்பட்ட சந்தச் செய்யுள்கள். ஸுப்ரபாதம்: இறைவனைப் பள்ளியெழுச்சி பாடும் காலையில் சொல்லப்படும் துதி தண்டகம்: a measured type of prose composition, not metrical ஒருவகை அளவுக் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.sangatham.com/news/notes/sloka_varieties.html/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	</channel>
</rss>

