ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது. ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம்....
மேலும் படிக்க...
செய்திகள்
சமஸ்க்ருதம் குறித்த புதிய தகவல்கள்
சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?
சமஸ்க்ருத இலக்கண சொற்கள்
தமிழ் இலக்கணத்தில் 'பெயர்ச்சொர்ல்', 'வினைச்சொல்' (noun, verb) போன்ற இலக்கண பெயர்களுக்கு ஈடான சமஸ்க்ருத இலக்கண சொற்களும், அவற்றுக்கான விளக்கங்களின் தொகுப்பு.
மேலும் படிக்க...
முகமா… வாயா…
அண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார்… “சேலத்தில் முக்கிய நபர் கைது!” – பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் “அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா?” – கவுண்டமணி மாதிரி கேட்கிறார். முக்கியம் என்று இங்கே சொல்வது “முதன்மையான” – “பிரதானமான” என்ற பொருளில். இந்த முக்கியம் என்கிற வார்த்தையே “முக்யம்” என்கிற சமஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது தான். முக்யம் என்பதும் முகம் என்கிற சொல்லில் இருந்து...
மேலும் படிக்க...
சீனாவில் காளிதாசன் சிலை!
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது. ஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காளிதாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால்...
மேலும் படிக்க...
தெரியுமா உங்களுக்கு?
இன்றைய சமஸ்க்ருதத்தில் காணப் படும் பல வார்த்தைகள் வேதகால சம்ஸ்க்ருதத்தில் கிடையாது. பாணினி யார்? சமஸ்க்ருத காவியங்களில் என்ன சிறப்பு? ஆங்கிலத்தில் அப்படியே பயன்படும் சமஸ்க்ருத வார்த்தைகள்!
மேலும் படிக்க...
சமஸ்க்ருத புத்தக கண்காட்சி 2011
“விஸ்வ சம்ச்க்ருத புஸ்தக மேளா” என்கிற சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி முதன் முறையாக பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இது ஜனவரி 7 – 10, 2011 மூன்று நாட்கள் நடைபெற திட்டமிடப் பட்டுள்ளது. பல்வேறு சமஸ்க்ருத மொழி வளர்ச்சி அமைப்புகள் இணைந்து இக்கண்காட்சியை ஒரு விழாவாக கொண்டாடுகின்றன. இந்நிகழ்வின் நோக்கமாக நவீன சமஸ்க்ருத ஆராய்ச்சி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது சமஸ்க்ருத அறிஞர்களை ஊக்குவிப்பது சமஸ்க்ருத மொழி புத்தகங்கள், பதிப்பகங்களுக்கு சந்தையை ஏற்படுத்தி தருவது சமஸ்க்ருத...
மேலும் படிக்க...
உலக சமஸ்க்ருத மாநாடு 2012
பதினைந்தாவது உலக சமஸ்க்ருத மாநாடு வரும் 2012 வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து பத்தாம் தேதி வரை நடை பெற உள்ளது. இது போன்ற உலக சமஸ்க்ருத மாநாடுகள் 1972 வருடம் துவங்கி பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு (2009) பதினான்காவது மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறுகிற நான்காவது சமஸ்க்ருத மாநாடு இது.
மேலும் படிக்க...
வடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்
சென்னைப் பல்கலைக் கழகம், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சில புத்தகங்களை, சமஸ்க்ருதம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. இந்த மொழிபெயர்க்கும் குழுவின் தலைவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான திரு. ஜி. திருவாசகம் அவர்கள், பாரதியார் பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதியின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட பனிரெண்டு புத்தகங்களை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்த விழாவில் பங்கு கொண்டு பேசுகையில், மேலும் பனிரெண்டு புத்தகங்களை பல்கலைக் கழகம் மொழி பெயர்க்க உள்ளதாக தெரிவித்தார்....
மேலும் படிக்க...
மக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி
நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தாமாகவே முன்வந்து வடமொழியை தமது இரண்டாம் மொழியாக பதிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. மக்கள் இவ்வாறு பதிவு செய்வதால் இறுதியில் கிடைக்கும் கணக்கெடுப்பில் வடமொழி கல்வியறிவு மிகுதியாக காணப்படும் – இது வடமொழியை பாதுகாக்க அரசாங்கத்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவதாக அமையும் என்று அந்த அமைப்பு கருதுகிறது. “சென்ற முறை கணக்கெடுப்பில் மொத்தம் 14, 135 பேர்கள்...
மேலும் படிக்க...
வடமொழி சஞ்சிகை “வாக்”
1977 ம் வருடம் புத்த தேவ் ஷர்மா, காசியில் சம்பூர்ணாநந்தா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்த போது, தான் கற்றுக் கொண்டிருந்த சமஸ்க்ருத மொழியை மறந்துபோவோம் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைக்கவும், படிப்பிலும் ஆராய்ச்சியிலும் ஒரு ஆண்டு இடைவெளி ஏற்பட்டது. அவ்வளவுதான், அவ்வளவு நாள் கற்று வைத்திருந்த சம்ஸ்க்ருத ஞானம் ஆவியாகி விட்டது. ஒரு மொழியை கற்று – கற்றதை காப்பாற்ற வேண்டுமானால் அதை பழக்கத்தில் கொண்டு வரவேண்டும்...
மேலும் படிக்க...


