கட்டுரைகள்

வடமொழி குறித்த உரைகள், மொழிபெயர்ப்புகள், குறிப்புகள் தமிழில்!

வடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…

sanskrit_appre_t

ஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல், வீட்டு பொறுப்புகள், சமூக பொறுப்புகள் என்று இருக்கும் போது, சமஸ்க்ருத வகுப்பிற்கு சென்று நேரம் செலவிட பெரும்பாலும் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இருக்காது.
மேலும் படிக்க...

Tags: , , , , ,
Posted in புத்தகங்கள் | No Comments »

வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்

shishupala

தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் ஐந்து நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறன. வடமொழியிலும் இதைப் போல முக்கியமாக பஞ்ச மகா காவியங்கள் என்று ஐந்து பெருங்காவியங்களை சொல்வர். குமாரசம்பவம், ரகுவம்சம் ஆகிய காளிதாசனின் படைப்புகள், பாரவியின் கிராதார்ஜுநீயம், மாகரின் சிசுபாலவதம், ஸ்ரீஹர்ஷரின் நைஷதசரிதம் ஆகியவையே அந்த ஐம்பெருங்காப்பியங்கள். சமஸ்க்ருதம் கற்கும்பொழுது மேலே குறிப்பிட்ட காவியங்களை இதே வரிசையில் பயில சொல்வார்கள்.
மேலும் படிக்க...

Tags: , , , ,
Posted in கட்டுரைகள் | 1 Comment »

சமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!

SanskritPoet4

"தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!"
மேலும் படிக்க...

Tags: , , , , , ,
Posted in கட்டுரைகள் | No Comments »

வடமொழி தமிழ் அகராதி

tamildict_th

இந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. "संस्कृत भाषा शब्द समुद्र: - द्राविड भाषार्त सहित: - தமிழ் பொருளுடன் வடமொழி சொற்கடல்" என்ற பெயரில் தற்போது என்னிடம் உள்ள இந்த பதிப்பு உள்ளே ஐந்து பாகங்களை உள்ளடக்கிய ஒரே புத்தகமாக இருக்கிறது.
மேலும் படிக்க...

Tags: , , , , ,
Posted in Highlights, புத்தகங்கள் | No Comments »

நகைச்சுவை

आम्राणि क्वा गतानि? மாம்பழங்கள் எங்கே போய்விட்டன? अमेरिकाभुवं | அமெரிக்காவுக்கு काजुगरा:? முந்திரி? क्वान्यता? வேறெங்கே... (அதுவும் அங்கேதான்) दुर्धषं कदलीफलं! வாழைப்பழங்களையும் காணமுடியவில்லை... तदखिलं रष्या निष्प्रेषितं | அது அத்தனையும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி ஆகிவிட்டன. तन्नोऽपि प्रहिणोतु शासनपदं यत्रास्ति सर्वम् गतम् | இதெல்லாம் எங்கே போயிற்றோ அங்கேயே தயவு செய்து அரசாங்கம் நம்மையும் அனுப்பி வைக்குமா?
மேலும் படிக்க...

Tags: , ,
Posted in நகைச்சுவை | 1 Comment »

வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…

ஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க...

Tags: , , , ,
Posted in கட்டுரைகள் | No Comments »

தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்

தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி - நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.
மேலும் படிக்க...

Tags: , , , , , , ,
Posted in கட்டுரைகள் | 5 Comments »

பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை

வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப்...
மேலும் படிக்க...

Tags: , , , , ,
Posted in கட்டுரைகள் | No Comments »

கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள்

சங்கத கவிஞர்கள் போட்டிக்காக தமக்குள் ஒருவர் கவிதையின் ஒரு பகுதியை மட்டும் சொல்ல, மற்ற கவிஞர்கள் அந்த ஒரு பகுதியையும் சேர்த்துக் கொண்டு முழு கவிதையையும் இயற்றுவார்கள். பெரும்பாலும் போட்டிக்கு கொடுக்கப்படும் பகுதி கொஞ்சம் எடக்கு முடக்காக இருக்கும். இதற்கு வடமொழியில் சமஸ்யா பூர்த்தி (समस्या पूर्ति) என்று சொல்வார்கள். கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள் (गौरी पचति गोमांसम्) என்கிற சொற்றொடரை எடுத்துக் கொண்டு இங்கே வடமொழியில் சமஸ்யா பூர்த்தி...
மேலும் படிக்க...

Tags: , , , , ,
Posted in கட்டுரைகள் | 1 Comment »

வடமொழி கற்க பத்து வழிகள்

யூனிகோடு எழுத்துரு பிரபலமாவதற்கு முன், வெவ்வேறு விதமான எழுத்துருக்கள்(fonts), மென்பொருள்கள் (software) என்று இந்திய மொழிகளில் கட்டுரைகள், மின்னஞ்சல்கள் அனுப்புவது மிக கடினமாக இருந்து வந்தது. கூகிளின் சிறந்த சேவைகளில் ஒன்றான இந்த Google Transliteration அமைப்பு தமிழ், தெலுங்கு, மட்டும் அல்லாமல் தேவநாகரி லிபியை கொண்ட இந்தி சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளிலும் யூனிகோடு எழுத்துருவில் எழுத உதவுகிறது. இதன் மூலம் வடமொழியை தேவநாகரி எழுத்துருவில் எழுதுவது மிக எளிது.
மேலும் படிக்க...

Tags: , , , , , , , , , ,
Posted in கட்டுரைகள் | 2 Comments »

Video

பெட்டகம்