கருத்து 1: சங்கதம் ஒரு இறந்து போன மொழி
கருத்து உடைபடுதல்: “இறந்து போன மொழி” என்பதை விளக்கவும்
கருத்தின் மறுதலை: சில மேற்கத்திய போலி சம்ஸ்க்ருத மொழியாளர்களும், இந்தியாவின் சில ‘பெயர் பெற்ற’ வரலாற்று ஆய்வாளர்களும் இந்த “இறந்து போன மொழி” பிரசாரத்தை துவக்கி தம்மை தாமே மகிழ்வித்துக் கொண்டுள்ளனர். இது இப்படியே படித்தவர்களின் ஃபேஷனும் ஆகிவிட்டது. இதே வகையில் பார்த்தால் லத்தீன் மொழிகூட பேச்சு மொழியாக இல்லாததால் இறந்து போன மொழி என்று யாராவது சொல்கிறார்களா? அப்படி பார்த்தால் சுமேரிய எகிப்திய மொழிகள் கூட இறந்து போனவைதான். இதே வகையில் தான் சங்கதமும் இருக்கிறதா?
இறந்து போன மொழி என்றால் சில வசதிகள் உண்டு:
- அது தனிப்பட்ட மொழியாக ஒரு சிறு குழுமத்துக்குள் இருக்கும் (அதாவது “இறந்த மொழி” என்கிற கருத்தை நம்புகிறவர்களுக்குள்)
- தன்னைச்சுற்றி ஒரு புகழ் வளையத்தைப் பெற்றிருக்கும் – அதன் மூலம் அந்த மொழியறிந்த மனிதர்களுக்கும் சிறப்பு கிடைக்கும்
- பிராமணர்களைத் தவிர யாரும் அதை கற்க முயலுவதில்லை
நாம் பின்னால் சென்று கிமு 500 முதல் கி.பி 1600 வரையுள்ள காலத்தில் உள்ள நிலையை பார்ப்போம்.
- சங்கதம் ஒரு சிறு குழுக்குள்ளேயே (பிராமணர்கள்) இருந்தது.
- சங்கதம் ஒரு அரச மொழியாக பெருமையும் புகழும் கொண்டிருந்தது – அதன் மூலம் பிராமணர்களும் புகழ் கொண்டிருந்தார்கள்.
- பிராமணர்களை தவிர ஏனைய மக்களில் ஒரு சிலரைத் தவிர யாரும் சங்கதத்தை கற்க முயலுவதில்லை.
ஆகையால் மேலே சொன்ன கருத்துக்கள் ‘இறந்து போன மொழி’ என சமஸ்க்ருதத்தை சொல்வதற்கு முன்னமே உண்மைகளாகத்தான் இருந்தது (இப்போது பிராமணர்களின் இடத்தை மேற்கத்திய சம்ஸ்க்ருத மொழியாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் பிடித்திருக்கிறார்கள்). அப்படியானால், சம்ஸ்க்ருதம் இறந்த மொழியாகவே இத்தனை நாளும் இருந்ததா என்ன? ஆமெனில் சம்ஸ்க்ருதத்தில் ஆயிரக்கணக்கான படைப்புகள் உருவாக காரணம் என்ன?
கருத்து 2: சம்ஸ்க்ருதம் ஒரு கடினமான மொழி
கருத்து உடைபடுதல்: “கடினமான மொழி” என்பதை விளக்கவும்
கருத்தின் மறுதலை:
எந்த மொழிதான் கடினமானது இல்லை? ஜெர்மானிய மொழியில் புணர்ச்சி விதிகள் இல்லை. மாண்டரின், ஜப்பானிய மொழிகள் சித்திர எழுத்துக்களாக ஏனைய கோடுகளைக் கொண்டு சிக்கலாக இருக்கின்றன. பிரெஞ்சு மொழியில் “r” என்ற ஒலி மட்டுமே போதும். உண்மை என்னவெனில் ஒவ்வொரு மொழியுமே நமது பார்வையைப் பொறுத்து கடினமானதாகத் தோன்றும். மாறவேண்டியது நமது பார்வைதான்.
சொல்லப் போனால், ஆங்கிலம்தான் மிக கடினமான மொழி. அதன் எழுத்துக்கும் ஒலியியல் தொடர்பு இல்லை. ஒவ்வொரு எழுத்தும் இரண்டு விதங்களில் எழுதப்படுகின்றன (capital and small). ஒவ்வொரு வார்த்தையின் ஒலிக்குரிப்பையும் தனியாக கற்கவேண்டும். அதன் இலக்கணம் ஒரே விதமாக அமையும் முறையை பெற்றிருக்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்கியங்களில் சரியான அடிக்கோடுகள் (punctuation) இல்லையென்றால் அர்த்தமே மாறிவிடும்.
கருத்து 3: சம்ஸ்க்ருத மொழியால் எந்த பயனும் இல்லை.
கருத்து உடைபடுதல்: “மொழியினால் பயன்” என்பதை விளக்கவும்
கருத்தின் மறுதலை: செயல் இல்லாமல் விளைவு இல்லை.
பண வருவாய் பயன்: (Monetary Benefit)
- சம்ஸ்க்ருத மொழி ஆராய்ச்சியாளர்கள் என்று போலியாக சொல்லிக் கொள்பவர்கள், பழைய சம்ஸ்க்ருத புத்தகங்களை ஆராய்ந்து, பழக்க தோஷத்தாலோ, ஆதாரமில்லாமல் தவறாக புரிந்து கொண்டோ, அந்த புத்தகங்களைப் பற்றி புதிய புத்தகங்கள் எழுதி பயன் அடைகிறார்கள். அந்த புத்தகங்கள் வெளிவந்த பின், சமஸ்க்ருதத்தை விரும்புவது – வெறுப்பது குறித்த சர்ச்சை கிளம்புகிறது.
- தெற்காசியாவில் உள்ள சம்ஸ்க்ருத அறிஞர்கள் (இந்தியாவில் பிறந்து விட்டதாலேயே) அவர்கள் பெற்று விட்ட அரை வேக்காட்டு அறிவைக் கொண்டு, மேலே சொன்ன ஆராய்ச்சியாளர்களுக்கு தவறான தகவல்களை ஊட்டுகிறார்கள்.
- வைதீகர்கள் வேறு யாரும் ஏற்று செய்ய முடியாமல் தமக்கே கிடைத்து விட்ட உரிமையில் யாகம் நடத்துவதன் மூலம் பயன் பெறுகிறார்கள்.
தற்பெருமை பயன்கள் (Ego-boosting)
- பெயர் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் தங்களது கோட்பாடுகளை வரலாறாக கூறி, ஏனையவர்களை கேள்வி கேட்க முடியாமல் செய்து பயன் அடைகிறார்கள்
- மாணவர்கள் சமஸ்க்ருதத்தை கற்று மற்ற சம்ஸ்க்ருதம் தெரியாதவர்களை மட்டம் தட்டி பயன் பெறுகிறார்கள்
- பதிவர்கள் தாம் எழுதுவது யாருக்கும் புரியாமல் போகட்டும் என்று சமஸ்க்ருதத்தை தொட்டு தற்பெருமை கொள்கிறார்கள்.
கருத்து உடைபடுதல்: “நிறைவான மொழி” என்பதை விளக்கவும்
கருத்தின் மறுதலை:
இது வலது சாரி சம்ஸ்க்ருத ஆர்வலர்களுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இந்த படத்தைப் பாருங்கள். சம்ஸ்க்ருதம் இந்தோ – ஐரோப்பிய மொழிகளுள் ஒரு மூலையில் இருக்கிறது. கல்வியாளர்களின் PIE (Proto-Indo-European) மொழிகள் குறித்த கருத்துக்கள் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்த கருத்துக்களின் உந்து சக்தியாக பண வருவாய் இருக்கிறதே தவிர உண்மை சிறிதளவும் இல்லை. பல பேர்கள், சம்ஸ்க்ருதம் கணினிக்கு ஏற்ற மொழி என்று Forbes இதழ் குறிப்பிட்டதாக சொல்கிறார்கள். இது எவ்வளவு தூரம் தவறாக குறிப்பிடப் படுகிறது என்று தெரியவில்லை. கணினிக்கு ஏற்றது என்னவெனில், சம்ஸ்க்ருதம் போன்ற ஒரு மொழியை வரையறுக்க பாணினி உபயோகித்த முறையான விதிகள் தான். வேறு எந்த மொழியும் இவ்வாறு முறையான விதிகளை பெறவில்லை. இந்த முறை கணினிக்கு ஏற்றதே தவிர, அந்த மொழியே அல்ல.
கருத்தின் மறுதலை:
சரியான உச்சரிப்பு சன்ஸ் + க்ரி + தம் – [where n is nasalized, just like ‘song’, Ri is like ‘ee’ in tweet ]. ऋ (Ri) ரி என்ற எழுத்து உச்சரிப்பது குழப்பும். பற்களின் மேலே நாவால் லேசாக தொட்டு உச்சரிக்கவேண்டும்.
திரு வாசு ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய ஆங்கில பதிவின் மொழியாக்கம்
Good article. My wishes to Sri Vasu Srinivasan. Here is a related article which nails down the motive of the so-called sanskritists in the West:
http://www.sanghparivar.org/blog/rkm/decline-of-indology-in-the-west-from-max-m-ller-to-witzel
Please first stop calling it “Vada mozhi”. Call it with its name “Samskritam”.
The name “Vada mozhi” itself seems to have intended to separate it away from South Indians.
//வேறு எந்த மொழியும் இவ்வாறு முறையான விதிகளை [ப்]பெறவில்லை//
வேறு எந்த மொழியும்? ஏன் தமிழ் மொழி முறையான விதிகளைப் பெறவில்லையா? உங்கள் கருத்துகளைத் தெரிந்துகொள்ளக் கேட்கிறேன்.
இன்னொரு கேள்வி, சமசுக்கிருதத்துக்கு அகர வரிசை எங்கிருந்து வந்தது? மற்ற இந்திய-ஐரோப்பிய மொழிகளில் இல்லாதவகையில், தமிழ் மொழியை ஒத்து வருகின்றதே? இது ஏதோ போட்டா போட்டிக்காகக் கேட்கவில்லை. தமிழ் மொழிக்கும், சமசுக்கிருத மொழிக்கும் உள்ள உறவுகளை நேர்மையுடன், சாய்வின்றி அலசவும், கருத்தாடவும் தடையாக அவ்வவ் மொழி “சாய்வாளர்கள்” இருக்கின்றார்கள். யாதும் ஊரே என்னும் தமிழனுக்கு வடமொழி என்பதால் வேறுபாடு வந்துவிடாது. வடமொழி என்றால் சமசுக்கிருதம் மட்டும் என்பதும் அல்ல (பல நேரங்களில் சமசுக்கிருதத்தைத்தான் குறிக்கும்). வடமொழி தென் மொழி என்பது தமிழர்களின் நெங்கால வழக்கு. வடமொழியைத் தமிழர்கள் தொன்று தொட்டு போற்றியும், காத்துமே வந்துள்ளனர்.
செல்வா
கனடா
mr.Raja the name “vada mozhi” was given by tholkaappiyar without intention of seperating it from south indians.Because in his timeperiod samaskritham named after its geographical locality
உங்கள் வலை தளத்தில் சமஸ்கிருதம் சொல்லி தருகிரிர்களா
Well written. Good infm