வடமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து வடமொழிக்கும் ஏராளமாக அகராதிகள் உள்ளன. வடமொழியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து வடமொழிக்கும் அகராதிகள் உள்ளனவா என்று ஒரு நண்பர் கேட்டார். அப்படி எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. வடமொழி அறிந்த தமிழர்கள் யாரும் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை என்று தோன்றியது.
தமிழிலிருந்து சிலப்பதிகாரம் – மணிமேகலை, பெரியபுராணம் ஆகிய பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் வடமொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அந்த அறிஞர்களுக்கு வடமொழி நன்கு அறிந்த காரணத்தினால் அகராதி எதுவும் உருவாக்க வேண்டும் என்று தோன்றாமல் – அல்லது அதற்கு ஒரு அவசியம் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.
நண்பர் ஜடாயு பிரபல கர்நாடக இசை கலைஞரும், சாஹித்ய கர்த்தாவுமான பாபநாசம் சிவன் ஒரு சம்ஸ்க்ருதம் – தமிழ் அகராதியை உருவாக்கி இருக்கிறார் என்று ஒரு குறிப்பு கொடுத்தார். இந்த குறிப்பைக் கொண்டு எளிதாக இந்த அகராதியை கண்டு பிடிக்க முடிந்தது.
இந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. “संस्कृत भाषा शब्द समुद्र: – द्राविड भाषार्त सहित: - தமிழ் பொருளுடன் வடமொழி சொற்கடல்” என்ற பெயரில் தற்போது என்னிடம் உள்ள இந்த பதிப்பு உள்ளே ஐந்து பாகங்களை உள்ளடக்கிய ஒரே புத்தகமாக இருக்கிறது.
வடமொழிச் சொல்லுக்கு பொருள் தருவதால் இதை அகராதி என்று சொல்லலாமே தவிர, வழக்கமான அகராதிகளைப் போல் இது தொகுக்கப் படவில்லை. சிவன் அவர்கள் இதை நூதனமான முறையில், சொல்லின் எதுகை மோனைகளை அடிப்படையாக கொண்டு தொகுத்திருக்கிறார். அதனால் அகராதியை உபயோகிக்கும் எண்ணத்தில் வார்த்தைகளை இதில் தேடுவது மிகக் கடினம் – மேலும் சாதாரண வினைச்சொற்கள், உரிச்சொற்கள் பெருமளவு இதில் இல்லை.
சில உதாரணங்கள்:
மூன்றாவது தரங்கத்தில்:
आननं – முகம்
काननं – காடு, பிரமன் முகம், ஜலம்
लेपनं- பூச்சு
वेपनं – நடுக்கம்
शोभनं – மங்களம்
இவ்வாறு புத்தகம் முழுவது எதுகை – மோனைகளைக் கொண்டே தொகுக்கப் பட்டுள்ளது. சிவன் அவர்கள் பொதுவான அகராதி குறித்த எதிர்பார்ப்பையும் மனதில் கொண்டு ஒவ்வொரு பாகத்தில் இறுதியிலும், அந்த பாகத்தில் வந்த அத்தனை சமஸ்க்ருத சொற்களையும் அகரவரிசைப் படி கொடுத்திருக்கிறார்.
சொல்லப் போனால், சமஸ்க்ருதம் நன்கு அறிந்து அதில் கவிதைகள் – சாஹித்யங்கள் எழுத முனைபவர்களுக்கு இந்த புத்தகம் பெரும் உதவியாக இருக்கக் கூடும். பாபநாசம் சிவன் அவர்களே ஒரு வடமொழி கவிஞராகவும், சங்கீத மேதையாக இருப்பதாலும் இவ்வாறு தொகுத்துள்ளார். சமஸ்க்ருதம் கற்க விரும்புகிறவர்களுக்கு இந்த சொற்கடல் உதவும் என்று தோன்றவில்லை.
வடமொழி = தமிழ் நேரடியான அகராதிகள் எதுவும் இன்னமும் இருப்பதாக தெரியவில்லை. இனி யாராவது சமஸ்க்ருதம் அறிந்த தமிழர்கள் அதனை உருவாக்கினால்தான் உண்டு.
இந்தப் புத்தகம் பற்றி: http://shivanisai.net


Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334
Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334
Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334
Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334
Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334